பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

எண்ணுவதற்குக் குறைவுபடாத பொருட்செல்வமும், உயர்ந்த குடிப்பிறப்பும், அரசர் வழங்கும் மானியச் செல்வமும், அரசரால் பாராட்டப் பெறும் தகைமையும் முதன்மையானவை அல்ல.
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
Updated on
1 min read


எண்ணக் குறைபடாச் செல்வமும், இற்பிறப்பும்,
மன்னருடைய உடைமையும், மன்னரால்
இன்னர் எனல் வேண்டா, இம்மைக்கும் உம்மைக்கும்
தம்மை உடைமை தலை.    (பாடல்: 273)


எண்ணுவதற்குக் குறைவுபடாத பொருட்செல்வமும், உயர்ந்த குடிப்பிறப்பும், அரசர் வழங்கும் மானியச் செல்வமும், அரசரால் பாராட்டப் பெறும் தகைமையும் முதன்மையானவை அல்ல. இப்பிறப்பின் செயல்களில் இருந்து தொடர்ந்து அடுத்து வரும் நல்பிறப்புகளில் செய்யும் நற்செயல்களே தலைமையானவை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com