பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

முற்காலத்தில் தேவர்கள் சாவா வாழ்வு தரும் அமிழ்தத்தைப் பாதுகாத்து வைத்து இருந்தனர். ஆனால், கருடன் ஒன்று அதனைத் திருடிச் சென்றுவிட்டது.
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
Updated on
1 min read

அமையா இடத்து ஓர் அரும் பொருள் வைத்தால்,
இமையாது காப்பினும் ஆகா, இமையாரும்
அக் காலத்து ஓம்பி, அமிழ்து கோட்பட்டமையின்,
நல் காப்பின் தீச் சிறையே நன்று.   (பாடல்: 336)

முற்காலத்தில் தேவர்கள் சாவா வாழ்வு தரும் அமிழ்தத்தைப் பாதுகாத்து வைத்து இருந்தனர். ஆனால், கருடன் ஒன்று அதனைத் திருடிச் சென்றுவிட்டது. எனவே, ஹபொருத்தம் இல்லாத பாதுகாப்பு அற்ற இடத்தில் பொருளை வைத்துக் கண் இமையாமல் காப்பாற்றினாலும் திருட்டுப் போய்விடும்.  எனவே, யாரும் நெருங்க முடியாத இடத்தில் சேமித்த பொருளை வைத்துக் காத்தலே நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com