பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அலை நீரை இடைவிடாது தூவுகின்ற உப்பங்கழிகளை உடைய கடலோரத் தலைவனே, சோற்றைப் பத்திரமாகப் பார்த்துக் கொள் என்று காக்கையைக் காவலுக்கு வைக்க முடியுமா? கூடாது.
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
Updated on
1 min read


ஊக்கி, உழந்து, ஒருவர் ஈட்டிய ஒண் பொருளை,
"நோக்குமின்' என்று, இகழ்ந்து, நொவ்வியார்கை விடுதல் }
போக்கு இல் நீர் தூஉம் பொரு கழித் தண் சேர்ப்ப }
காக்கையைக் காப்பு இட்ட சோறு.      (பாடல்: 315)


அலை நீரை இடைவிடாது தூவுகின்ற உப்பங்கழிகளை உடைய கடலோரத் தலைவனே, சோற்றைப் பத்திரமாகப் பார்த்துக் கொள் என்று காக்கையைக் காவலுக்கு வைக்க முடியுமா? கூடாது. ஓயாது உழைத்து, உயர்ந்து சேர்த்த அரிய பொருளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கீழ்மக்களிடம் ஒப்படைத்தல் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com