பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

புன்னை மரங்கள் பரந்து செழித்து இருக்கும் கடற்பரப்பை உடையவனே! செழித்து வளர்ந்து இருக்கும் ஒரு மரத்தின்கீழ் இன்னொரு மரத்தை வளர்த்தல் இயலாது; கூடாது.
பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
Updated on
1 min read

மன்னவன் ஆணைக்கீழ், மற்றையார் மீக்கூற்றம்
என்ன வகையால் செயப் பெறுப?  புன்னைப்
பரப்பில் நீர் தாஅம் படு கடல் தண் சேர்ப்ப!
மரத்தின் கீழ் ஆகா, மரம்.      (பாடல்: 311)

புன்னை மரங்கள் பரந்து செழித்து இருக்கும் கடற்பரப்பை உடையவனே! செழித்து வளர்ந்து இருக்கும் ஒரு மரத்தின்கீழ் இன்னொரு மரத்தை வளர்த்தல் இயலாது; கூடாது. அதுபோலவே, அரசனின் ஆணை செல்லும் இடங்களில் அந்த ஆணைக்கு மாறாக மற்றவர் எவ்வாறு ஆணை செலுத்த முடியும்? செலுத்தார். செலுத்தக் கூடாது என்பது கருத்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com