மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

பல்லக்குசாமி பைந்தமிழ் ஞானியாரடிகள்!

சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களும் தமிழாய்ந்த தமிழ்ப் புலவர்களை ஆதரித்துவந்தனர். இதனால் தமிழையும் அரசரையும் இணைத்துக்கூறும் மரபு இன்றளவும் தொடர்கிறது.

News image
Updated On :15 மே 2023, 2:30 pm IST

சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களும் தமிழாய்ந்த தமிழ்ப் புலவர்களை ஆதரித்துவந்தனர். இதனால் தமிழையும் அரசரையும் இணைத்துக்கூறும் மரபு இன்றளவும் தொடர்கிறது.
பாடு தமிழ்வளர்த்த கூடல் என்கிறது புறந்திரட்டு.
சோமன் வழிவந்த பாண்டியநின் நாடுடைத்து நல்ல தமிழ் என்கிறர் திருமுருகாற்றுப்படை உரையாசிரியர் நச்சினார்க்கினியர்.
நன் பாட்டுப்புலவனாயச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளுல்னோன்கான் என்கிறது அப்பர் தேவாரம்.
சங்கத்தமிழ் சங்க முகத்தமிழ் என்கிறது திருமங்கையாழ்வாரின் பெரியதிருமொழி.
உறைவான் உயர் மகிற் கூடலில் ஆய்ந்த ஓஒ; தீந்தமிழிக் துறைவாய் நுழைந்தனையோ என்கிறது மாணிக்க வாசகரின் திருக்கோவையார்.
அந்த தமிழ்ப் பணியின் மரபில் வந்தவர்தான் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானியாரடிகள். 
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் சைவக்குடும்பத்தில் அண்ணாமலை ஐயருக்கும் பார்வதியம்மைக்கும் மே 17,1873-இல் பிறந்தார் ஞானியாரடிகள். அவரது இயற்பெயர் பழனியாண்டி என்பதாகும்.
பழனியாண்டியின் பெற்றோர், திருநாகேஸ்வரத்திலிருந்து அடிக்கடி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியர் மடாதிபதிகளைக் காணச்செல்வார்கள். அப்போதைய மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக பரமசிவ மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் 'பழனியாண்டி மடத்திலிலேயே இருக்கட்டும்' எனக் கூற அவரது வாக்கை மீறாது பெற்றோர் பழனியாண்டியை மடத்திலேயே விட்டுவிட்டு புறப்பட்டார்கள்.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என பன்மொழி பயின்றதோடு விநாயகர் அகவல், திருவாசகம், சிவபுராணம் திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா போன்றவற்றையும் பயின்றார்.
பழனியாண்டியின் 17-ஆம் வயதில் சிவசண்முக சுவாமிகள் பழனியாண்டியை அடுத்த மடாதிபதியாக நியமித்து சந்நியாச தீட்சை வழங்கினார். பழனியாண்டி, மடாதிபதியாக பொறுப்பேற்றார்.
மடத்தின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பல்லக்கிலேயே பல இடங்களுக்கும் பயணம் செய்தார். அதை தன் வாழ்நாளில் ஒரு முறை கூட மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் பல இடங்களுக்குச் செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு நாள் புதுச்சேரி கலைமகள் கழக ஆண்டு விழாவிற்கு வருகை புரிந்த ஞானியாரடிகளிடம், திரு.வி.க. 'காரில் பயணம் செய்தால் அதிக இடங்களுக்குப் போகலாம்' என கூறியும் அதை ஞானியாரடிகள் ஏற்கவில்லை.
1901-இல் ஒருநாள் ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவர் திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரரை தரிசித்து விட்டு ஞானியாரடிகளை சந்தித்தார். அப்போதே ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஞானியாரடிகள் 'தமிழின் தற்கால நிலை' எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அப்போது அவர், 'ஜமீன்தார்கள் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்' என்று கூறினார். அதனை ஏற்ற பாண்டித்துரைத் தேவர் அதே ஆண்டு மதுரையில் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கினார். 
ஞானியாரடிகள் 'வாணி விலாச சபை' என்ற அமைப்பை உருவாக்கி, பலருக்கும் தமிழ் பயிற்றுவித்தார். 'ஞானியார் மாணவர் கழகம்' என்ற அமைப்பை உருவாக்கி தமிழறிஞர்களை பலரையும் உரை நிகழ்த்த வைத்துள்ளார். உ.வே.சா., சதாசிவம் பிள்ளை, ரா.பி. சேதுபிள்ளை போன்றோர் இதில் உரையாற்றியுள்ளனர். 
தஞ்சை கரந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏழாவது, எட்டாவது ஆண்டு விழா நிகழ்வுகளுக்கு ஞானியாரடிகள் தலைமை ஏற்றார். அடிகளாரின் வேண்டுகோளுக்கிணங்க 1938-இல் கரந்தையில் புலவர் கல்லூரி தொடங்கப்பட்டது. அதை அடிகளாரே தொடக்கி வைத்தார். 
புதுவை மாநிலத்தில் வசித்துவந்த ஞானப்பிரகாச முதலியார் என்பவர் கிறித்தவர். ஆயினும், மத நல்லிணக்கத்தை விரும்புபவர். வடலூர் வள்ளலார் மீது பெருமதிப்பு உடையவர். ஒருமுறை புதுவை கலைமகள் கழகத்திற்கு வருகை தந்த ஞானியாரடிகளைச் சந்தித்து தம்முடைய இல்லத்திற்கு வருமாறு அழைத்தார். அவருடைய இல்லத்திற்குச் சென்ற ஞானியாரடிகள், அங்கு 'சீதாகல்யாணம்' என்ற தலைப்பில் அருமையான சொற்பொழிவையும் நிகழ்த்தினார்.
சென்னையில் அப்போது 'சைவ சித்தாந்த மகா சமாஜம்' என்றொரு அமைப்பு செயல்பட்டு வந்தது. அதன் தலைவர் அஷ்டாவதானி பூவை கல்யாணசுந்தர முதலியார். அவர், அடிகளார் கிறித்தவர் இல்லத்திற்கு சென்றது பிடிக்காததால், தனது சமாஜ தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். இதனை அறிந்த அடிகளார் பெரிதும் வருந்தினார்.
புதுவையில் இருந்த பங்காரு பத்தர் என்ற தமிழ் ஆர்வலர், 1911-இல் அடிகளாரை அழைத்து 'கலைமகள் கழகம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். மகாகவி பாரதியார், வ.வே.சு. ஐயர் போன்றோர் அதில் உறுப்பினராக இருந்துள்ளனர்.
நாத்திகரான ஈ.வெ.ரா. ஞானியாரிடத்தில் இருந்த பெருமதிப்பு காரணமாக தனது 'குடிஅரசு' இதழை ஞானியாரை வைத்தே தொடங்கினார். 
தமிழாசிரியர் ஒருவர் ஞானியாருக்கு யாப்பிலக்கணம் கற்பித்து வந்தார். அவர் தினமும் ஒரு வெண்பா இயற்றுவார். மாணவரான ஞானியார் அவ்வெண்பாவிற்கு சீர், தளை போன்றவற்றை எழுதி வைத்து, மறுநாள் ஆசிரியரிடத்தில் காட்டுவார். ஒரு நாள் ஆசிரியர் கீழ்க்கண்ட வெண்பாவை எழுதிவைத்து விட்டுச்சென்றார்.
நற்பா டலிபுரத்து நாதனே நாயினேன்
பொற்பாம் நினதடியைப் போற்றினேன் -  தற்போது
வேண்டுஞ் செலவிற்கு வெண் பொற்காசுபத்து 
ஈண்டு தருக இசைந்து    

அடுத்த நாள் ஆசிரியர் நோட்டுப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தபோது அதில் 10 ரூபாய் இருந்தது. ஆசிரியர் அடிகளாரைப் பார்த்து, 'நான் பாட்டுக்கு மனம் போன போக்கில் எழுதிவைத்தேன், எதையும் எதிர்பார்த்து அல்ல' என்றார். அதற்கு அடிகளார் 'நான் பாட்டுக்கு பணம் வைத்தேன், வேறு எதற்காகவும் அல்ல' என சிலேடையாக பதிலுரைத்தார். 
மடத்தின் மரபை மீறாமல் தம் வாழ்நாள் முழுவதும் சிவிகையிலேயே பயணித்தார். அதனால் மக்கள் அவரை, 'பல்லக்கு சாமி' என்றே அழைத்தனர். சைவமும் தமிழும் தழைக்க அயராது  பாடுபட்டு வந்த ஞானியாரடிகள் 1942 பிப்ரவரி 1 அன்று இறைவனடி சேர்ந்தார்.

(மே 17 ஞானியாரடிகள் பிறந்த 150-ஆம் ஆண்டு நிறைவு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.