

அடைய அடைந்தாரை அல்லவை செய்து,
கொடை வேந்தன் கோல் கொடியன் ஆகி, குடிகள்மேல்
கூட்டு இறப்பக் கொண்டு, தலையளிப்பின், அஃது அன்றோ,
சூட்டு அறத்து வாயில் இடல். (பாடல்: 329)
தம்மை அடைக்கலமாக நம்பியுள்ள மக்களுக்குத் துன்பம் பலவும் செய்து நீதியை மறுதலித்துக் கோல் கொடியனாகிக் குடிமக்களிடம் இருந்து வரியை மிகுதியாகத் தண்டி அதனைக் கொண்டு மக்களுக்கே நன்மை செய்வதாகச் சொன்னாலும் அது தோகை மயிலின் வண்ணக் கொண்டையை அறுத்து அதற்கு உணவாக அதன் வாயில் இடுவதைப் போன்றது ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.