சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வள்ளுவரும் அப்பரும்

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று     இக்குறட்பாவின் முதல் மற்றும் இரண்டாவது அடியில் இரண்டாவது எழுத்தாக "னி' எழுத்து அமைந்து அடி எதுகையாகிப் படிப்போருக்கு இன்பம் நல்குகிறது.

News image
Updated On :24 செப்டம்பர் 2023, 6:57 pm IST


இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று இக்குறட்பாவின் முதல் மற்றும் இரண்டாவது அடியில் இரண்டாவது எழுத்தாக "னி' எழுத்து அமைந்து அடி எதுகையாகிப் படிப்போருக்கு இன்பம் நல்குகிறது.

மேலும் இக்குறட்பாவின் முதல் அடியிலேயே முதலாவதாக அமைந்துள்ள "இனிய' என்னும் சொல்லுக்கு எதிரான "இன்னாத' என்னும் சொல் அமைந்துள்ளதும் சிறப்புக்குரியது. அதே போன்று இரண்டாவது அடியில் அப்பாடலுக்கு மிக முக்கியமான "கனி' என்னும்  சொல்லுக்கு எதிர்சொல் "காய்' என்பதும் அந்த அடியிலேயே அமைந்துள்ளதும் பாவினுக்குச் சிறப்பைத் தருவதாகும்.

ஒன்றரை அடி குறட்பாவில் மேல் வரியில் இனிய என்பதற்கு எதிர்ப்பதமான இன்னாத என்றும்  கீழ் வரியில் கனி  என்பதன் எதிர்ச்சொல் காய் அமையுமாறு பாடலை அமைத்திருப்பதும் படிப்போருக்கு  இன்பம் நல்குவதாகும்.

திருக்குறளில் தோய்ந்த திருநாவுக்கரசர் (அப்பர்) இக்குறட்பாவில் தன்னையே மறந்து இனிய உளவாக என்னும் வரியை, தான் பாடியுள்ள தேவாரத்தில் எடுத்தாண்டுள்ளார்  

மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த 
மேனியான் தாழ் தொழாதே
உய்யலாம் என்று எண்ணி உறி  தூக்கி
உழி தந்து என்  உள்ளம் விட்டுக்
கொய்யுலா  மலர்ச்சோலைக் குயில்  
கூவ மயில் ஆலும்  ஆரூரரரைக்
கையினால் தொழாது ஒழிந்து  
கனி இருக்கக்  காய் கவர்ந்த கள்வனேனே 

இந்தப்பாடலில் கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேன் எனத் திருக்குறளை எடுத்தாண்டுள்ளார் திருநாவுக்கரசர்.

ஒன்றே முக்கால் அடி குறட்பாவில் இரண்டு சொல்லும் அவற்றுக்கான எதிர்ச்சொற்களும் முதல் அடியிலும் இரண்டாவது அடியிலும் அமைத்து வள்ளுவர் பாடியிருப்பதும் அருமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.