எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அமெரிக்க படைகள் வாபஸ்! ஹோர்முஸை கடந்த 1.25 கோடி பீப்பாய் எண்ணெய் கப்பல்கள்!

ஈரானுக்கு எதிரான கடல்வழி முற்றுகையை அமெரிக்கா திரும்பப் பெற்றது பற்றி...

News image

கோப்புப்படம் - AP

Updated On :19 ஜூன் 2026, 8:52 am IST

ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான கடல்வழி முற்றுகையைத் திரும்பப் பெற்றுவிட்டதாக அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

உலகெங்கிலும் நீண்ட நாள்களாக எதிா்பாா்க்கப்பட்ட ஈரான்-அமெரிக்கா இடையிலான போா் நிறுத்த ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.

இந்த நிலையில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதை போல், ஈரான் துறைமுகங்களுக்கு எதிரான அனைத்து கடற்படை முற்றுகையையும் திரும்பப் பெற்றுவிட்டதாக அமெரிக்க மத்திய ராணுவ கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வழிகாட்டுதலின்படி, ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து கடல் போக்குவரத்து மீதான தடையை அமெரிக்கப் படைகள் நீக்கியது.

ஈரான் துறைமுகங்களுக்கு அல்லது அங்கிருந்து வெளியேறும் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுக்காது. அமெரிக்க ராணுவ முற்றுகை அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களும் கடைப்பிடிக்கப்படுவதையும், முழுமையாகச் செயல்படுத்தப்படுவதையும் உறுதிசெய்ய, எங்களது கடற்படைக் கப்பல்கள் எல்லையில் நிலைநிறுத்தப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செய்தியாளர்களுடன் பேசுகையில், அமெரிக்க முற்றுகை திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து, சரக்குக் கப்பல்கள் பயணத்தை தொடங்கியுள்ளன, நேற்று மட்டும் 1.25 கோடி பீப்பாய் எண்ணெய் கப்பல்கள் மூலம் சென்றதாக தெரிவித்தார்.

அதேபோல், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ”பாரசீக வளைகுடா நீரிணை வழியாகச் செல்ல விரும்பும் கப்பல்களுக்கு விரைவான அனுமதி வழங்க அந்நாட்டின் நீரிணை நிர்வாகம் வழிவகை செய்யும். போரின்போது அப்பாதையில் பதிக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றும் தெரிவித்துள்ளது.

Summary

US forces withdraw - Oil tankers carrying 12.5 million barrels pass through Hormuz

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.