தருமம் செய்யாதோர்...

வானளாவிய மலைமுடிகளையுடைய நாட்டிற்கு உரிய தலைவனே தாம் நன்றாக உடுத்து அனுபவிக்காமலும், வயிறார உண்டு பயனடையாமலும், உடலை வருத்திக் கொண்டும், என்றும் அழிவில்லாத...
தருமம் செய்யாதோர்...
Published on
Updated on
1 min read

உடாஅதும், உண்ணாதும், தம் உடம்பு செற்றும்,

கெடாஅத நல்லறமும் செய்யார், கொடாஅது

வைத்தீட்டி னாரிழப்பர்; வான்தோய் மலைநாட!

உய்த்தீட்டும் தேனீக் கரி.

(பாடல் 10, அதிகாரம்: செல்வம் நிலையாமை)

வானளாவிய மலைமுடிகளையுடைய நாட்டிற்கு உரிய தலைவனே தாம் நன்றாக உடுத்து அனுபவிக்காமலும், வயிறார உண்டு பயனடையாமலும், உடலை வருத்திக் கொண்டும், என்றும் அழிவில்லாத தருமங்களைச் செய்யாதவர்களாகவும், யாசகர்களுக்குக் கொடாதவர்களாகவும், பொருளைச் சேர்த்து வைப்பவர்கள் இருக்கிறார்களே - அவர்கள் அதனை ஒருநாள் இழந்துவிடுவர். இதற்குப்பற்பல மலர்களினின்றும் தேனைக் கொண்டு வந்து கூட்டிலே சேர்த்துவைக்கும் தேனீயே நல்ல சான்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com