வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பொய்யாகப் புனைந்தாலும்...

எப்பொழுதும் உணவுண்ணலாகிய செயலினாலேயே உறுதி பெறும் என்று, அறிவிலே பெரியவர்கள் உண்மையை அறிந்து பார்த்துத் தள்ளிவிட்ட செத்தையாகும் இந்த உடம்பு.

News image
Updated On :25 ஜனவரி 2026, 12:29 pm

இணையதளச் செய்திப் பிரிவு

தக்கோலந் தின்று, தலை நிறையப் பூச்சூடிப்,

பொய்க்கோலஞ் செய்ய, ஒழியுமே } 'எக்காலும்

உண்டி வினையுள் உறைக்கும்' எனப் பெரியோர்

கண்டு, கை விட்ட மயல்?

(பாடல் 43 அதிகாரம்: தூய்து அன்மை)

எப்பொழுதும் உணவுண்ணலாகிய செயலினாலேயே உறுதி பெறும் என்று, அறிவிலே பெரியவர்கள் உண்மையை அறிந்து பார்த்துத் தள்ளிவிட்ட செத்தையாகும் இந்த உடம்பு.

இதனைத் தக்கோலம் என்னும் மணப்பொருளைத் தின்றும், தலை நிறைய பூச்சூடியும், பொய்யாகப் புனைந்து புனைந்து கோலஞ் செய்து கொண்டாலும், இதன் கெட்ட நாற்றம் முழுவதும் ஒழிந்து விடுமோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.