தண்டாச் சிறப்பிற்றம் இன்னுயிரைத் தாங்காது,
கண்டுழி எல்லாம் துறப்பவோ,-மண்டி,
அடிபெயராது, ஆற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்?
(பாடல் 62 அதிகாரம்: சினம் இன்மை)
வைத்த காலைப் பெயர்த்து எடுத்துவைக்கவும் முடியாதபடி பெரிய அவமதிப்பு இடைவிடாது நெருங்கி வந்த போதிலும், அதற்கும் உள்ளங் கலங்காது, தாம் மேற்கொண்ட செயலை நிறைவேற்றும்படியான மனவுறுதி கொண்டவர்கள், சிறந்தவர்கள். அவர்கள் நீங்காத சிறப்பினையுடைய தமது இனிதான உயிரைப் பேணித் தாங்குவதற்கு நினையாமல், கண்டவற்றில் எல்லாம் செல்லவிட்டு, அதனை விட்டுவிட என்றாவது நினைப்பார்களோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









