மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக்,}கைவாய்,
கலங்காமற் காத்து, உய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும்.
(பாடல் 59 அதிகாரம்: துறவு)
'மெய் வாய் கண் மூக்குச் செவி' என்னும் பெயர் கொண்ட ஐந்து புலன்களின் வழியாக எழுகின்ற வேட்கை என்னும் ஆசையினை, அதனால் தன் மனம் கலங்காமற் காத்துக் கொண்டவனாகத் துறவு ஒழுக்கத்திலே அந்த மனத்தைச் செலுத்துகின்ற ஆற்றல் உடையவன் எவனோ அவன் தப்பாமல் வீட்டின்பத்தைப் பெற்று விடுவான். 'புலனிச்சைகளினால் மனம் சிதறாமற்படிக்கு, உள்ளத்து உறுதியுடன் தவநெறியிலே ஈடுபடுகிறவன் தவறாமல் முத்தியடைவான்; பிறர் அடையார்' என்பது கருத்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்: காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்

பெங்களூரு: தடை செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சாவை விற்றதற்காக ஐவர் கைது!

குறிஞ்சிக்கலியில் தலைமகனின் ஆளுமைப் பண்புகள்!

மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



