மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக்,}கைவாய்,
கலங்காமற் காத்து, உய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும்.
(பாடல் 59 அதிகாரம்: துறவு)
'மெய் வாய் கண் மூக்குச் செவி' என்னும் பெயர் கொண்ட ஐந்து புலன்களின் வழியாக எழுகின்ற வேட்கை என்னும் ஆசையினை, அதனால் தன் மனம் கலங்காமற் காத்துக் கொண்டவனாகத் துறவு ஒழுக்கத்திலே அந்த மனத்தைச் செலுத்துகின்ற ஆற்றல் உடையவன் எவனோ அவன் தப்பாமல் வீட்டின்பத்தைப் பெற்று விடுவான். 'புலனிச்சைகளினால் மனம் சிதறாமற்படிக்கு, உள்ளத்து உறுதியுடன் தவநெறியிலே ஈடுபடுகிறவன் தவறாமல் முத்தியடைவான்; பிறர் அடையார்' என்பது கருத்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீத்தார் - பெரியார் - நல்லோர்

வடிவேல் எறிந்த வான்பகை - நூல் அறிமுகம் | விமர்சனம்

அல்லி நகரத்து மண்வாசனை...

ரூ. 15 லட்சம் கோடி சர்ச்சை... பேசுபொருளான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்! செபிக்கு ஒத்துழைக்கத் தயார்!!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



