3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

அக்னி நட்சத்திரம்! அபிஷேக பிரியன்!

இது "அக்னி நட்சத்திர' காலம். உயிரினங்களைக் கடுமையான அனல் வாட்டி வதைக்கும். பலருக்கு "சன் ஸ்ட்ரோக்' போன்றவற்றால் பெரும் ஆபத்து உண்டாகக்கூடும். இதற்கெல்லாம் காரணம், சூரியன் வெளிப்படுத்தும் கடுமையான வெப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:07 am IST

இது "அக்னி நட்சத்திர' காலம். உயிரினங்களைக் கடுமையான அனல் வாட்டி வதைக்கும். பலருக்கு "சன் ஸ்ட்ரோக்' போன்றவற்றால் பெரும் ஆபத்து உண்டாகக்கூடும். இதற்கெல்லாம் காரணம், சூரியன் வெளிப்படுத்தும் கடுமையான வெப்பம்தான். ஆனால் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்து, கோடைக்கேற்ற உணவுகள் அருந்தி, தற்காப்போடு நடந்துகொள்பவரை கத்திரி வெயில் அதிகம் பாதிப்பதில்லை. ஆயின், "மனித குலம் என்னதான் சாமர்த்தியமாக நடந்துகொண்டாலும், சங்கரராகிய (நல்லதையே செய்பவர்) சிவபெருமான் திருவருளின்றி எதுவும் முழுமை பெறாது' என்று வேத - புராணங்கள் கூறுகின்றன.

"அருக்கனில் சோதி அமைத்தோன்' என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறுகின்றார். "அருக்கன்' எனில் சூரியன். அதில், "சிவமே செந்தீயாக' நிற்கிறது என்பது பொருள். இதே கருத்து, யஜுர் வேதத்திலும் தெளிவாகக் கூறப்படுகிறது. கத்திரி வெயில் காலத்தில், சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்வது பெரும் புண்ணியம். "இந்த உலகமே சிவ வடிவம்' என்று வேதங்கள் கூறுவதால் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும் பெரும் புண்ணியம், வெப்பு நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றும்.

சில சிவாலயங்களில், "தாரா பாத்திரம்' என்ற குவிந்த அடிப்பாகம் உடைய குடம் போன்ற அமைப்பை, சிவலிங்கத் திருமேனியின் மீது கட்டி, அதிலிருந்து துளித்துளியாக லிங்கத்தின் மீது தண்ணீர் விழும்படி, இச்சந்தர்பத்தில் வைப்பது மரபு. வீட்டில் சிவலிங்க பூஜை செய்பவர்களும் இதைப் பின்பற்றலாம். அரனார் குளிர்ந்தால் அகிலமே குளிரும்! ஏனெனில் அவர் அபிஷேக பிரியன்!

"நடமாடும் கோயில்' என்று சிவனடியார்களைக் குறிப்பிடுகின்றார் திருமூலர். ஆதி பரம்பொருளாகிய பரமேஸ்வரனே, தன் பக்தன் பாண்டியன் போரிட்டபோது, "தண்ணீர் பந்தல்' வைத்து அனைவருக்கும் உதவினார். "தண்ணீர் பந்தர் செயம் பெற வைத்து நன்னீர்ச் சேவகனாகிய நன்மையும்' என்றிதனை போற்றுகிறது திருவாசகம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய அப்பூதியடிகளும் தண்ணீர் பந்தல் வைத்து தாகம் தீர்த்ததை, சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தின் மூலம் அறிகின்றோம். எனவே "கத்திரி வெயில்' காலத்தில் மகேசன் சேவையோடு, மக்கள் சேவையும் செய்தால் சூரியக் கடவுளின் அருளும், சிவத்தின் அருளும் கிடைத்துக் குளிர்வோம் என்பது உறுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.