ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஆலய அதிசயங்கள்

புதுக்கோட்டை - பொன்னமராவதி சாலையில் உள்ளது பேரையூர். இங்கு நாகநாதர் கோயிலுக்குள் சிறிய சுனை உள்ளது.

Updated On :6 மார்ச் 2014, 10:50 am

• புதுக்கோட்டை - பொன்னமராவதி சாலையில் உள்ளது பேரையூர். இங்கு நாகநாதர் கோயிலுக்குள் சிறிய சுனை உள்ளது. மகப்பேறு இல்லாதவர்கள், நாகம் சிலை வடித்து வைப்பதாக வேண்டினால் பலன் கிடைக்கிறதாம். "மகப்பேறு வழங்கும் நாகநாதர்' என்று மூலவரை அழைக்கிறார்கள்.

• சென்னை - திருப்பதி போகும் வழியில் ஊத்துக்கோட்டை நாகலாபுரத்தில் வேதநாராயணப் பெருமாள் தலையில் இருந்து இடுப்பு வரை மனித உருவமும், கீழே மீன் வடிவமும் கொண்டு காட்சியளிக்கிறார்.

• சிவாலயங்களில் துர்க்கை வடக்கு நோக்கி அருள்பாலிப்பது வழக்கம். திருவாரூர் ஆந்தக்குடி சோமேஸ்வரர் ஆலயத்திலுள்ள துர்க்கை அம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள்.

• நவகிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில், நின்ற நிலையில் அருள்பாலிக்கும் அபூர்வத்தை திருவாரூர், தியாகராஜர் ஆலயத்தில் காணலாம்.

• புதுக்கோட்டை மாவட்டத்தில் அருள்புரியும் தேனுகந்தநாதருக்கு தினமும் தேனடையிலிருந்து தேன் எடுத்து அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறெங்கும் இதுபோன்று நடைபெறுவதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.