அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பணிவாக இருங்கள்

தற்பெருமை' மனித உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு வகை தொற்று நோய். அது அனைத்து நற்செயல்களையும் அழித்துவிடும் வல்லமை பெற்றது.

News image
Updated On :6 மார்ச் 2014, 10:54 am

ஜி. அஹ்மது

தற்பெருமை' மனித உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு வகை தொற்று நோய். அது அனைத்து நற்செயல்களையும் அழித்துவிடும் வல்லமை பெற்றது. நாம் அதை நீக்கி நற்பண்புடன் நடந்தால், இறையன்பு - இறை மன்னிப்பு இரண்டினையும் பெறலாம்.

இக்காலத்தில் "புகழையும் - புகழ்ச்சியையும்' விரும்பாத மனிதர்களே இல்லை. இதனை அறவே விரும்பலாகாது என இறைவன் அல் குர்ஆன் அத்.31, வசனம் 18இல் கூறுவதைக் காண்போம்.

"(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே. பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே. நிச்சயமாக கர்வம்கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை''.

கல்வி - கேள்வி, சொத்து - சுகம், பட்டம் - பதவி அனைத்தும் மனிதர்களுக்கு இறைவன் அருளிய அருட்கொடை. மனிதனை சோதிக்கவே இறைவன் அளித்துள்ள சன்மானங்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நமக்கு ஹஜ் - உம்ரா போன்ற ஒரு நற்செயல் புரிய நற்பேறு கிடைத்தால், நாம் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல வேண்டுமே தவிர, அதை மக்களிடம் விளம்பரப்படுத்தவே கூடாது. ""நான் ஹஜ் - உம்ரா கடமைகளைப் புரிந்துள்ளேன். இவ்வளவு தொகை ஜகாத்தும், தர்மமும் செய்துள்ளேன்'' என ஒரு மனிதன் பெருமை பேசினால், அம்மனிதன் இறைவனின் கோபத்திற்கு ஆளாவான்.

தூய்மையான எண்ணத்தோடு நற்காரியம் செய்பவர் தற்பெருமை செய்ய மாட்டார். தாம் செய்யும் நற்காரியங்களை இறைவன் ஏற்பானா அல்லது நிராகரிப்பானா என அஞ்சுவர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் "பணிவு' என்கிற நற்பண்புடன் நடந்துகொள்வார்கள். "புகழ் - புகழ்ச்சி' என்பதெல்லாம் அவர்கள் அறியாதவர்கள், அவர்களிடம் தற்பெருமை என்கிற கர்வம் கிடையவே கிடையாது.

""பணிவாக இருங்கள்; நீங்கள் ஒருவர் மற்றவர் மீது கர்வம் கொள்ள வேண்டாம். என அல்லாஹ் எனக்கு "வஹீ' (இறை அறிவிப்பு) அறிவித்துள்ளான்'' என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: முஸ்லிம்).

நான்காம் கலீஃபா (ஜனாதிபதி) அலீ(ரலி) அவர்களிடம் ""நபிகளார் அவர்களுக்குப் பிறகு மக்களில் சிறந்தவர் யார்?'' எனக் கேட்டார் ஒருவர். ""அபூபக்கர்'' என்றார்கள் அலீ (ரலி). மீண்டும் "அவர்களுக்குப் பிறகு?'' என்றதும், ""உதுமான்'' என்று சொல்லிவிடலாம் என அஞ்சி, ""மக்களில் சிறந்தவர் நீங்கள் தானே?'' எனக் கேட்டார் அம்மனிதர். உடனே கலீபா அலீ (ரலி), ""நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என பதிலளித்தார்கள்.

நபி(ஸல்) அவர்களால் எத்தனையோ உயர்வான போற்றத்தக்க நற்செய்திகள் சொல்லப்பட்டவராக கலீஃபா அலீ(ரலி) அவர்கள் இருந்தும்கூட, தன்னை சாதாரணமானவன் என சொன்னது அவர்களின் பணிவின் அடையாளம். ஆனால், இக்காலத்தில் உயர்பதவி வகிப்பவர்களை சற்று எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

தன்னை பிறரைவிட உயர்த்திக்காட்டும் நோக்கம் நபித் தோழர்களுக்கு அறவே இருந்தது கிடையாது. எனவே, மற்றவர்கள் நம்மைப் புகழ்வதை விரும்பாமல், ""எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்ற திருக்குர்ஆன் வசனத்தை நாம் அனைவரும் மனதில் பதிந்தால், "தற்பெருமை' அகன்று "பணிவு' என்ற பண்பானது நமது உள்ளத்தில் இயல்பாகவே வந்து சேரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.