பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

அமுத மொழிகள்

வழிபாடு ஆன்ம பலத்தைக் கொடுக்கும். அது உள்ளன்போடு செய்வதாக இருக்க வேண்டும். உள்ளத்தில் உண்மையிருப்பவர்கள் தோற்க மாட்டார்கள்.

News image
Updated On :20 மார்ச் 2014, 10:33 am

கார்திகேயன்

• வழிபாடு ஆன்ம பலத்தைக் கொடுக்கும். அது உள்ளன்போடு செய்வதாக இருக்க வேண்டும். உள்ளத்தில் உண்மையிருப்பவர்கள் தோற்க மாட்டார்கள். வழிபாட்டில் பலன் கிட்டவில்லையாயின் வழிபாட்டை உண்மையுடன் செய்யவில்லை என்று உணர வேண்டும்.

• நலம் என்றால் என்ன பொருள்? உண்பதுவா? உறங்குவதுவா? மனைவி மக்களுடன் வாழ்வதுவா? இல்லை. தெய்வ உணர்ச்சி ஒன்றுதான் நலம். ஒன்றைப் பெற்றால் நலம் என்பது உலகியல்; எல்லாவற்றையும் இழப்பது நலம் என்பது அருளியல்.

• எந்தத் தருமத்தையும் செய்ய முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். தாக விடாய் கொண்டவனுக்குத் தண்ணீர் கொடுத்தால் போதும். ஒருவன் ஒரு பசுவுக்கு ஒருநாள் தண்ணீர் கொடுத்து உபசரித்தவன் அவன் முன்னோர்களாகிய ஏழு தலைமுறையைக் கரையேற்றுகிறான். தண்ணீரின் குணம் தெய்வீகமானது. எனவே, தவித்த வாய்க்குத் தண்ணீர் தர மறக்க வேண்டாம்.

• பரிசுத்தமான நல்லவர்கள் மீது இல்லாத ஒரு பழியைக் கூறி எவன் தூற்றுகிறானோ, அவன் அந்த நல்லவர்களுடைய பாவத்தைப் பங்கிட்டுக் கொள்ளுகிறான். பாவங் குறையும் வழி இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.