கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆங்கிலச் சிறை அதிகாரி அறிந்த காஞ்சி மகான்

காஞ்சி மஹாஸ்வாமிகளைப் பற்றி ஓர் ஆங்கிலச் சிறை அதிகாரி தம் நாட்குறிப்பில் இப்படி எழுதியிருக்கிறார்:

News image
Updated On :28 டிசம்பர் 2018, 4:30 am

ஸ்ரீதர் சாமா

காஞ்சி மஹாஸ்வாமிகளைப் பற்றி ஓர் ஆங்கிலச் சிறை அதிகாரி தம் நாட்குறிப்பில் இப்படி எழுதியிருக்கிறார்:  

வருடம் 1935, கோல்கட்டாவிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ள மிதுனாபூரில் பெரியவர் முகாம். மருத்துவர்கள், தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள் என்று பலரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

பெரியவர் விஜயம் கேள்விப்பட்டு அவரை தரிசிக்க சிறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி கேட்டனர். அதிகாரி ரொம்ப கண்டிப்பானவர். ஆனாலும் அவர்கள் பக்தியை மெச்சி ஒரே ஒரு மணிநேரம் தரிசனத்திற்கு அனுமதி கொடுத்தார். அதாவது மாலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிக்குள் பெரியவரை தரிசித்து விட்டுத் திரும்பி விட வேண்டும். அதிகாரியும் அவர்களுடன் வந்தார்.  

கைதிகள் முகாமிற்கு வந்த நேரத்தில் பெரியவர் வழக்கம் போல் மாலை நேர பூஜையில் இருந்தார். மணி ஐந்தே முக்கால் என்று கடிகாரம் காட்டியது. இன்னும் தரிசனம் ஆரம்பித்த பாடே இல்லை. கைதிகள் ஏமாற்றத்துடன் கிளம்ப ஆயுத்தமாகினர். 

அப்போது திடீரென்று மஹான் பூஜை முடிந்து வெளிப்பட்டார். விஷயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு சுதந்திரப் போராட்டக் கைதிகளைப் பார்க்க முற்பட்டார். கைதிகள் ஒருமித்த குரலில் நாடு விரைவில் சுதந்திரம் அடைய வேண்டுமென்ற தங்கள் ஆசையை வெளிப்படுத்தி அதற்கு ஸ்வாமிகள் ஆசிர்வாதம் வேண்டும் என்று வேண்டினர்.  பெரியவாளும் உற்சாகமாகப் பிரார்த்தனை செய்து அவர்களுக்கு பிரசாதம் வழங்கி அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்து நெகிழ்ந்த சிறை அதிகாரி இதைப் பற்றித் தன் குறிப்பில் எழுதுகையில் ""தங்கள் எதிர்காலத்தை உதறிவிட்டு தேசத்திற்காகப் போராட வந்தவர்கள்,

துப்பாக்கியையும் பீரங்கியையும் துச்சமாக மதித்தவர்கள் மஹாஸ்வாமிகள் முன் பெட்டிப்பாம்பாக அமர்ந்திருந்ததையும் அவரிடம் பேசும் போது மகத்தான ஆன்மிகக் கட்டுப்பாடைக் கடைப்பிடித்ததையும் நேரில் கண்டேன். அந்த ஒரு நிமிடத்தில் என் அதிகாரம் எல்லாம் கரைந்து நானும் அதற்குப் பிறகு அன்பையும் பக்தியையும் என் வாழ் நெறியாகக் கொள்ள முடிவெடுத்தேன்'' என்று எழுதினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.