

பகவானின் லீலைகள் ஆகிய செயல்களையே இடைவிடாமல் நினைத்து, ஆடிப்பாடி ""அரங்கனே!'' என்று, அவன் திருநாமங்களைச் சொல்லிக் கூப்பிடும் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களின் திருவடித்துகள்களில் நாம் ஆடப் பெற்றால் பின்பு கங்கையாற்றில் நீர் குடைந்து ஆடும் ஆசைதான் எதற்கு?
-ஸ்ரீ குலசேகராழ்வார், திருமொழி2.2
கங்கை போன்ற புனித நதிகளில் மனிதனின் பாவங்கள் கரைந்து போகின்றன. அதுபோலவே, இறைவன் மீது பக்தியைக் கையாள்பவன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்.
-மகான் ஞானதேவர்
திருமாலின் திருநாமங்களைச் சொல்வதுதான் எல்லா வேதங்களின் சாரமாகும். ஆதலால் எம்பெருமானின் திருநாமங்களால், அவனைத் துதிக்கும் வகையைத் தெரிந்துகொள்ளுங்கள்.
-ஸ்ரீபூதத்தாழ்வார்,
இரண்டாம் திருவந்தாதி 39
நாம் ஒரு செயலை உற்சாகத்துடன் தொடங்கிச் செய்யும்பொழுது கவலைக்கு இடம் கொடுக்கக் கூடாது. அவ்விதம் செய்யாவிட்டால் அது நம்மை மேற்கொண்டு நமது முயற்சிகளைச் செய்யவிடாமல் அழித்துவிடும்.
-ராமாயணம்
ஏழை எளியவர்களுக்குத் தன்னால் இயன்றதைக் கொடுக்காமல் மறைத்து வைக்கக் கூடாது.
-ஒளவையார்
படிக்கத் தெரியாதவனுக்குப் புத்தகத்தைக் கொடுப்பதும், ஆத்மவித்தை கற்பதில் சிரத்தை இல்லாதவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதும் வீண் செயலாகும்.
-இந்து தர்மம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.