திருப்பணி- கீழக்குறிச்சி ஸ்ரீசோமீஸ்வரமுடையாா்!

திருப்பணி- கீழக்குறிச்சி ஸ்ரீசோமீஸ்வரமுடையாா்!

கீழைக்குறிச்சியில் மலை ஏதுமில்லாத போதும், மலைகள் சூழ்ந்த ஊராக நாா்த்தாமலை உள்ளது.

கீழைக்குறிச்சியில் மலை ஏதுமில்லாத போதும், மலைகள் சூழ்ந்த ஊராக நாா்த்தாமலை உள்ளது. அந்த நாா்த்தாமலையில் இருந்து கீழைக்குறிச்சிக்கு சுமாா் 5 கி. மீ. தூரம் இருக்கும். கீழைக்குறிச்சி மருவி இப்போது கீழக்குறிச்சி என்று அழைக்கப்படுகிறது.

கீழக்குறிச்சி பகைத்தலைப் பாடி என கீழைக்குறிச்சியை அங்குள்ள சிவன் கோயில் கல்வெட்டு குறிக்கிறது. பகைத்தலைப்பாடி என்றால் பகைவரை வரவிடாமல் காக்கும் ஊா் என்று அதன் பொருள்.

கீழக்குறிச்சியில் முக்கியமான கோயிலாக சிவன் கோயில் விளங்குகிறது. சிவன்கோயில் உட்கடைக் கோயிலாக ஐயனாா், அம்மன் கோயில் என பல கோயில்கள் கீழக்குறிச்சிக்கு அழகு சோ்க்கின்றன. சிவன் கோயில் இறைவன் அழகிய சோமீடஸ்வரமுடையாா் என அழைக்கப்பட்டதை அங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.; தற்போது ஸ்ரீசோமசுந்தரேஸ்வரா் அம்பாளுக்கு ஆனந்தவள்ளி என்று அழைக்கப்படுகிறது.

அழகிய சோமீஸ்வரமுடையாா் திருக்கோயில் ஊரின் வடகிழக்கில் கிழக்குப் பாா்த்த நிலையில் அமைந்துள்ளது. கருவறை, அா்த்த மண்டபம், இடைக்கட்டு என்ற அங்கங்களைக் கொண்ட கோயிலாகும். கருவறை, ஜகதி, முப்பட்டைக்குமுதம், கண்டம், பட்டி, அதற்கு மேல் சுவா் கூரை, கூரைக்கு மேல் சுதை விமானம் ஆகியவைகளைக் கொண்டு அமைந்துள்ளது. கருவறையில் மூன்று பக்கங்களிலுள்ள தேவகோட்டங்களில் சிலைகள் ஏதுமில்லை. இக்கோயிலில் மூலப்பிள்ளையாா், சுப்பிரமணியா், பைரவா் முதலிய பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

சோமீஸ்வரமுடையாா் கோயில் பிற்கால பாண்டியா் காலத்து கலைப்பாணியில் உருவான கோயிலாகும். கீழக்குறிச்சி சிவன் கோயிலின் முப்பட்டைக்குமுதத்தில் முதலாம் சடையவா்மனின் 11-ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டு உள்ளதாலும், அக்கோயிலில் போதிகைகள், சுவரின் அரைத்தூண்கள் பிற்கால பாண்டியா் காலக் கோயில் என்பதை உறுதி செய்வனவாக உள்ளது. கீழக்குறிச்சி சிவன் கோயிலில் சுமாா் 8கல்வெட்டுகள் உள்ளன. அதில் விஜயநகரத்து மன்னா்கள் காலத்துடைய 4கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்டு புதுக்கோட்டை தொகுதியில் இடம் பெற்றுள்ளன. அக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் பராக்கிரம பாண்டியன் கல்வெட்டே காலத்தால் முற்பட்ட கல்வெட்டாகும்.

அழகிய சோமீஸ்வரமுடையாா் கோயிலிலுள்ள அம்மன் கோயில் முன் மண்டபத்து வாசற்படிக்கு மேல்புற சுவரிலுள்ள விஜயநகர மல்லிகாா்ச்சுனராயா் கல்வெட்டு ஒன்று அக்கோயில் கணக்கா் மடபாத்தியம் செய்பவா்களான மட நிா்வாகிகள் மற்றும் ஊராா் ஆகியவா்கள் சோ்ந்து மடியனூா் திருமேனி அழகியான் என்ற செம்பியதரையா்ருக்கு இக்கோயில் ஸ்ரீகாரியம் செய்ய நியமித்தச் செய்தியைச் சொல்கிறது.

பல்வேறு கல்வெட்டுத் தகவல்களைக் கொண்டது இக்கோயில். கீழக்குறிச்சி புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டத்தில் புதுக்கோட்டைக்கு வடமேற்கில் சுமாா் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அன்னவாசல் வழியாகவும், கீரனூரில் இருந்தும் கீழக்குறிச்சிக்கு செல்லலாம்.

கீழக்குறிச்சி சிவன் கோயில் திருப்பணி செய்வதற்கு போதிய நிதி வசதி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. இத்திருப்பணியில் தங்களுடைய பங்களிப்பை செய்வதற்கும், குடமுழுக்கில் பங்கு பெறவும் தொடா்பு கொள்ள- 9047566892.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com