கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

செம்பரம்பாக்கம் ஆதிபராசக்தி ஈஸ்வரர் கோயில்

ஏரியால் புகழ்பெற்ற சென்னை செம்பரம்பாக்கம் கிராமத்தில் ஈஸ்வரி உடனுறை ஆதிபராசக்தி ஈஸ்வரர் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

News image
Updated On :5 மார்ச் 2021, 8:56 am

ஏரியால் புகழ்பெற்ற சென்னை செம்பரம்பாக்கம் கிராமத்தில் ஈஸ்வரி உடனுறை ஆதிபராசக்தி ஈஸ்வரர் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். சுமார் 1500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இத்திருக்கோயில் சென்னை - பூவிருந்தவல்லிக்கு மேற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

இரண்டாம் மாறவர்மன் ஸ்ரீவிக்கிரம பாண்டியனின் 3}ஆவது ஆட்சியாண்டில் (கி.பி. 1253) அமைக்கப்பட்ட கல்வெட்டுகள் இங்குள்ளன. அதில் "செம்பரம்பாக்கத்து ஆளுடையார் சக்தீஸ்வர மஹாதேவர் இவ்வூரைச் சேர்ந்த விச்சாகரன் அஞ்சேல் என்ற பெருமான் சாயச்சரத்தில் விளக்கெரிக்கவும், தச விளக்கு எரிக்கவும் இரண்டு பசுக்களைக் கொடையாக அளித்தமை' பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இக்கோயிலில் இறைவன் ஆதிபராசக்தி ஈஸ்வரர் கிழக்கு திசை நோக்கி அஷ்ட தாமரை இதழ்களின் மேல் மிகப்பெரிய லிங்க வடிவமாக வீற்றிருக்கிறார். ஆதிபராசக்தி ஈஸ்வரி தெற்கு முகமாக நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறாள். பல ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி இருந்த இக்கோயிலை ஊர் பொதுமக்களும், லோகநாதன், ரகு, வீரபத்திர செüத்ரி, ஈ.பாலகிருஷ்ணன் போன்றவர்களும் முன்னின்று, மூல ஸ்தானம், நந்திசிலை போன்றவற்றைப் புனரமைத்து பொதுமக்கள் வழிபாட்டிற்காக தங்களால் முடிந்த இறை பணியைச் செய்துள்ளனர்.  

திருப்பணிகள்: சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலுக்கு பல்வேறு ஊர்களிலிருந்து பொதுமக்கள் வந்து இறைவனை வழிபட்டு செல்கிறார்கள். இந்நிலையில், ஊருக்குள் வரும் பாதையை சீரமைக்கவும், சுமார் 5 ஏக்கர் பரப்பளவு உள்ள இத்திருக்கோயிலின் குளத்தைச் சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இத்திருப்பணிக்கு பக்தர்கள் பொருளுதவி செய்து ஈசன், ஈஸ்வரியின் அருள் பெறலாம். தொடர்புக்கு: லோகநாதன், ரகு - 9941034789 / 9092774704.

- ஆர்.வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.