அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகா பத்மன் ஆகிய எட்டு நாகராஜாக்களும், வலிமை - தலைமைப் பதவி - தீர்க்காயுள் ஆகிய வரங்களை வேண்டி, முதலில் பல்வேறு இடங்களில் தனித்தனியாக சிவ பூஜை செய்துள்ளனர். ஆனால், சர்ப்ப இனத்தவர்கள், மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் செய்த பாவங்களுக்காக விமோசனம் வேண்டும் பொருட்டு, இந்த எட்டு நாக ராஜாக்களும் ஒருநாள் ஒன்றிணைந்தனர்.
பிச்சிப்பூ மரங்கள் நிறைந்த பிச்சி வனத்தினிடையே ஆதியில் சுயம்புவாகத் தோன்றிய ஸ்ரீ பிச்சீஸ்வரப் பெருமானை அனுதினமும் பிச்சி மலர்களால் பூஜை புரிந்தனர். சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி, சர்ப்பங்களின் அநேக கோடி பாபங்களையும் போக்கி, அவர்களுக்கென தனி நாக லோகத்தையும் அருளிச்செய்தார்.
அதன் நன்றிக்கடனாக இன்றும் பல நாகங்கள் இங்கு உலாவுவதைக் காணலாம். சோழர் காலத்தில், இத்தல சிவலிங்கம் புற்றால் மூடியிருந்ததாகவும், அதைப் பெயர்க்கும்போது லிங்கத்தின் முடியில் கடப்பாரை பட்டு, ரத்தம் வந்ததாகவும், பின், ஈச்சங்கீற்றுகளைக் கொண்டு இடது தலைப்பகுதியில் தைத்ததாகவும் செவிவழிச் செய்தி கூறப்படுகிறது. இதனால் ஆதியில் இவ்வூர் தையலூர் என்றிருந்து மருவி "தச்சூர்' ஆனதாம்.
கருவறையுள் சதுர ஆவுடையாருடன் சுயம்பு மூர்த்தமாக பேரருள் பொழிகிறார் ஸ்ரீ பிச்சீஸ்வரர். தினந்தோறும் அகப்பேய் சித்தர் வழிபடும் மூர்த்தி. அவ்வப்போது நாகங்களும் இவரை பூஜிக்கின்றன. ஆலய வலம் வருகையில், வாம பாகத்தில் தனியே ஆலயம் கொண்டு அருள் புரிகிறாள் அன்னை ஸ்ரீ பிரகந்நாயகி. தலவிருட்சம் - பிச்சி மரம். தீர்த்தம் - கார்கோடக தீர்த்தம்.
சர்ப்ப தோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷத்தால் துன்பப்படுபவர்கள் இங்கு வந்து சுவாமி - அம்பாளுக்கு அபிஷேகம் நடத்தி, நீல நிறப் பட்டாடை அணிவித்து, பால் பாயசமும், அக்கார வடிசலும் படைத்து, வழிபட சிறந்த பலன்களைப் பெற்றிடலாம்.
அமைவிடம்: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், ஆரணியிலிருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தச்சூர் பிச்சீஸ்வரர் திருத்தலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருணாநிதி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி! மு.க. ஸ்டாலின் பதிவு!

அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! முதல்வர் விஜய் தனித்தீர்மானம்!

விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக்! நடிகை தபு கதாபாத்திர அறிமுக விடியோ வெளியீடு!

முடிவுக்கு வந்தது கருத்துருகளை உருவாக்குவோருக்கான வருவாய் பகிர்வு திட்டம்! எக்ஸ் அறிவிப்பு
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! பேரவையில் முதல்வர் Vijay பேச்சு! | TN Assembly | TVK



