எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பொன்மொழிகள்!

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 5:35 pm IST

* இறைவன் கட்டித் தங்கம் போன்றவன். அவன் திருநாமங்களோ கட்டித் தங்கத்தை உருக்கிச் செய்த அணிகலன்களைப் போன்றவை. கட்டித் தங்கத்தைக் காட்டிலும் அணிகலன்களையே மக்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.
 - பெரிய புராணம்


*பொய் சொல்பவன் வேருடன் அழிந்து போவானே! எனவே பொய் சொல்வதற்கு எனக்குத் துணிவில்லை.
-  பிரச்ன உபநிஷதம் 6.2


* குருடனுக்கு முகம் பார்க்கும் கண்ணாடியால் என்ன பயன்? அதுபோல், யமான அறிவு இல்லாதவனுக்கு சாஸ்திரங்களால் என்ன பிரயோஜனம்?
- சாணக்கிய நீதி


*மனிதர்களே! நீங்கள் நிலையுள்ளதாக இந்த மனித உடலை நம்பியிருக்கிறீர்கள். இந்த உடல் யமனுடைய ஓலை வந்து உங்களை அழைத்தால், ஓடு பெற்ற விலையையும் பெறாது.
- சிவவாக்கியார்


*விதி வலிமை வாய்ந்தது; தவறாமல் அனுபவித்து ஆக வேண்டும்; எனவே அறத்திற்கு மாறான செயல்
களைவிட்டு நீங்குதல் வேண்டும்.
- சிலப்பதிகாரம்


*இறைவா! நீங்கள் எனக்கு அதிக வெயில் காலத்தில் நிழல் தந்து காக்கக்கூடிய மரம் போன்றவர்; அந்த மரத்தின் நிழல் போன்றும் கனி போன்றும் எனக்கு 
இனிக்கக் கூடியவர்.
- வடலூர் வள்ளலார்


*அநேகர் மனதில் அகங்காரம் சிங்கம் போன்று அலைந்து திரிகிறது. இதைவிட்டுவிட்டால் மனதில் அமைதி குடி புகுந்து விடும்.
 - ராமகீதை (ஸ்ரீ ராமருக்கு அவரது குரு வசிஷ்டர் கூறிய அறிவுரை) 

*கொடிய சொற்களை ஒருபொழுதும் பயன்படுத்தாத மனிதர்களுக்கு உலகில் புகழ் கிடைக்கிறது.
 - விதுர நீதி


*இந்த உலகில் நிலையாக வாழ்பவர்கள் யார்? 
தர்மத்தைச் சார்ந்து இருப்பவன் இறந்த பின்பும் வாழ்கிறான். தர்ம சிந்தனையற்றவன் வாழும்போதே இறக்கிறான்.    
- சாணக்கியன்


*தெரிந்தும் இறைவன் நாமசங்கீர்த்தனம் செய்யாதவன் சண்டாளன், இறைவனின் நாமத்தை வெறுத்து நாமசங்கீர்த்தனம் செய்யாதவனும் சண்டாளன்  இவர்கள் மிருகங்களுக்குச் சமமானவர்கள்.
- மகான் போதேந்திரர்


*ஒருவரை வஞ்சித்துத் தேடிய செல்வம் வளர்வது போன்று தோன்றுகிறது. ஆனால் அந்தச் செல்வம் 
மிகவும் விரைவில் அழிந்து ஒழியும். 
- குமரகுருபரர்


*உணவு தூயதாக இருக்க வேண்டும். அவ்விதம் இருந்தால் மனம் பற்றின்றி, பொறாமையின்றி, மனமயக்கமின்றி பொருள்களுடன் தொடர்புகொள்ள முடியும். அப்போது மனமும் தூய்மை அடைகிறது. இதன் காரணமாக இடைவிடாத இறைவன் நினைவு மனதில் எழுகிறது.
 - சுவாமி விவேகானந்தர், ஞானதீபம் 1244, 245

தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.