* இறைவன் கட்டித் தங்கம் போன்றவன். அவன் திருநாமங்களோ கட்டித் தங்கத்தை உருக்கிச் செய்த அணிகலன்களைப் போன்றவை. கட்டித் தங்கத்தைக் காட்டிலும் அணிகலன்களையே மக்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.
- பெரிய புராணம்
*பொய் சொல்பவன் வேருடன் அழிந்து போவானே! எனவே பொய் சொல்வதற்கு எனக்குத் துணிவில்லை.
- பிரச்ன உபநிஷதம் 6.2
* குருடனுக்கு முகம் பார்க்கும் கண்ணாடியால் என்ன பயன்? அதுபோல், யமான அறிவு இல்லாதவனுக்கு சாஸ்திரங்களால் என்ன பிரயோஜனம்?
- சாணக்கிய நீதி
*மனிதர்களே! நீங்கள் நிலையுள்ளதாக இந்த மனித உடலை நம்பியிருக்கிறீர்கள். இந்த உடல் யமனுடைய ஓலை வந்து உங்களை அழைத்தால், ஓடு பெற்ற விலையையும் பெறாது.
- சிவவாக்கியார்
*விதி வலிமை வாய்ந்தது; தவறாமல் அனுபவித்து ஆக வேண்டும்; எனவே அறத்திற்கு மாறான செயல்
களைவிட்டு நீங்குதல் வேண்டும்.
- சிலப்பதிகாரம்
*இறைவா! நீங்கள் எனக்கு அதிக வெயில் காலத்தில் நிழல் தந்து காக்கக்கூடிய மரம் போன்றவர்; அந்த மரத்தின் நிழல் போன்றும் கனி போன்றும் எனக்கு
இனிக்கக் கூடியவர்.
- வடலூர் வள்ளலார்
*அநேகர் மனதில் அகங்காரம் சிங்கம் போன்று அலைந்து திரிகிறது. இதைவிட்டுவிட்டால் மனதில் அமைதி குடி புகுந்து விடும்.
- ராமகீதை (ஸ்ரீ ராமருக்கு அவரது குரு வசிஷ்டர் கூறிய அறிவுரை)
*கொடிய சொற்களை ஒருபொழுதும் பயன்படுத்தாத மனிதர்களுக்கு உலகில் புகழ் கிடைக்கிறது.
- விதுர நீதி
*இந்த உலகில் நிலையாக வாழ்பவர்கள் யார்?
தர்மத்தைச் சார்ந்து இருப்பவன் இறந்த பின்பும் வாழ்கிறான். தர்ம சிந்தனையற்றவன் வாழும்போதே இறக்கிறான்.
- சாணக்கியன்
*தெரிந்தும் இறைவன் நாமசங்கீர்த்தனம் செய்யாதவன் சண்டாளன், இறைவனின் நாமத்தை வெறுத்து நாமசங்கீர்த்தனம் செய்யாதவனும் சண்டாளன் இவர்கள் மிருகங்களுக்குச் சமமானவர்கள்.
- மகான் போதேந்திரர்
*ஒருவரை வஞ்சித்துத் தேடிய செல்வம் வளர்வது போன்று தோன்றுகிறது. ஆனால் அந்தச் செல்வம்
மிகவும் விரைவில் அழிந்து ஒழியும்.
- குமரகுருபரர்
*உணவு தூயதாக இருக்க வேண்டும். அவ்விதம் இருந்தால் மனம் பற்றின்றி, பொறாமையின்றி, மனமயக்கமின்றி பொருள்களுடன் தொடர்புகொள்ள முடியும். அப்போது மனமும் தூய்மை அடைகிறது. இதன் காரணமாக இடைவிடாத இறைவன் நினைவு மனதில் எழுகிறது.
- சுவாமி விவேகானந்தர், ஞானதீபம் 1244, 245
தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகாராஷ்டிர அரசின் அடக்குமுறையையாவது முதல்வர் விஜய் கண்டிப்பாரா ? டிடிவி தினகரன் கேள்வி

பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத்

காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு!

எனது சான்றிதழைக் காட்டுகிறேன், அந்த பேரரசர் தனது டிகிரி சான்றிதழைக் காட்டுவாரா? அபிஜீத் தீப்கே
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


