பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பொன்மொழிகள்!

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:36 pm IST

* இறைவன் கட்டித் தங்கம் போன்றவன். அவன் திருநாமங்களோ கட்டித் தங்கத்தை உருக்கிச் செய்த அணிகலன்களைப் போன்றவை. கட்டித் தங்கத்தைக் காட்டிலும் அணிகலன்களையே மக்கள் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.
 - பெரிய புராணம்


*பொய் சொல்பவன் வேருடன் அழிந்து போவானே! எனவே பொய் சொல்வதற்கு எனக்குத் துணிவில்லை.
-  பிரச்ன உபநிஷதம் 6.2


* குருடனுக்கு முகம் பார்க்கும் கண்ணாடியால் என்ன பயன்? அதுபோல், யமான அறிவு இல்லாதவனுக்கு சாஸ்திரங்களால் என்ன பிரயோஜனம்?
- சாணக்கிய நீதி


*மனிதர்களே! நீங்கள் நிலையுள்ளதாக இந்த மனித உடலை நம்பியிருக்கிறீர்கள். இந்த உடல் யமனுடைய ஓலை வந்து உங்களை அழைத்தால், ஓடு பெற்ற விலையையும் பெறாது.
- சிவவாக்கியார்


*விதி வலிமை வாய்ந்தது; தவறாமல் அனுபவித்து ஆக வேண்டும்; எனவே அறத்திற்கு மாறான செயல்
களைவிட்டு நீங்குதல் வேண்டும்.
- சிலப்பதிகாரம்


*இறைவா! நீங்கள் எனக்கு அதிக வெயில் காலத்தில் நிழல் தந்து காக்கக்கூடிய மரம் போன்றவர்; அந்த மரத்தின் நிழல் போன்றும் கனி போன்றும் எனக்கு 
இனிக்கக் கூடியவர்.
- வடலூர் வள்ளலார்


*அநேகர் மனதில் அகங்காரம் சிங்கம் போன்று அலைந்து திரிகிறது. இதைவிட்டுவிட்டால் மனதில் அமைதி குடி புகுந்து விடும்.
 - ராமகீதை (ஸ்ரீ ராமருக்கு அவரது குரு வசிஷ்டர் கூறிய அறிவுரை) 

*கொடிய சொற்களை ஒருபொழுதும் பயன்படுத்தாத மனிதர்களுக்கு உலகில் புகழ் கிடைக்கிறது.
 - விதுர நீதி


*இந்த உலகில் நிலையாக வாழ்பவர்கள் யார்? 
தர்மத்தைச் சார்ந்து இருப்பவன் இறந்த பின்பும் வாழ்கிறான். தர்ம சிந்தனையற்றவன் வாழும்போதே இறக்கிறான்.    
- சாணக்கியன்


*தெரிந்தும் இறைவன் நாமசங்கீர்த்தனம் செய்யாதவன் சண்டாளன், இறைவனின் நாமத்தை வெறுத்து நாமசங்கீர்த்தனம் செய்யாதவனும் சண்டாளன்  இவர்கள் மிருகங்களுக்குச் சமமானவர்கள்.
- மகான் போதேந்திரர்


*ஒருவரை வஞ்சித்துத் தேடிய செல்வம் வளர்வது போன்று தோன்றுகிறது. ஆனால் அந்தச் செல்வம் 
மிகவும் விரைவில் அழிந்து ஒழியும். 
- குமரகுருபரர்


*உணவு தூயதாக இருக்க வேண்டும். அவ்விதம் இருந்தால் மனம் பற்றின்றி, பொறாமையின்றி, மனமயக்கமின்றி பொருள்களுடன் தொடர்புகொள்ள முடியும். அப்போது மனமும் தூய்மை அடைகிறது. இதன் காரணமாக இடைவிடாத இறைவன் நினைவு மனதில் எழுகிறது.
 - சுவாமி விவேகானந்தர், ஞானதீபம் 1244, 245

தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.