வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

4 வெளிநாட்டவர்களுக்கு சீனாவில் மரண தண்டனை

போதை மருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த நான்கு வெளிநாட்டவர்களுக்கு சீனாவில் மரண தண்டனை

Updated On :2 மார்ச் 2013, 4:02 am IST

போதை மருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த நான்கு வெளிநாட்டவர்களுக்கு சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் தலைவன் நா காம், மியான்மரைச் சேர்ந்தவர். இவர் தவிர தாய்லாந்தைச் சேர்ந்த ஹசாங் காம், யி லாய், ஜா ஜிகா (லாவோஸ்) ஆகியோருக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி மெகாங் ஆற்றில் 2 சரக்குக் கப்பலில் இருந்த 13 ஊழியர்களை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்தக் கப்பலில்

30 லட்சம் டாலர் மதிப்பிலான 9 லட்சம் ஆம்பிடான் எனும் போதை மாத்திரை இருந்தது. இது தொடர்பாக இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானது. இந்நிலையில் இவர்கள் நால்வரும் பொதுமக்கள் முன்னிலையில் இரண்டு மணி நேரம் அணி வகுப்பு நடத்தப்பட்டனர். பின்னர் ஒரு வேனில் இவர்களுக்கு விஷ ஊசி போடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தண்டனைக்குப் பிறகு இவர்களது உடல்கள் சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.