பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் வியாழக்கிழமை நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். இதில், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து வந்த அகதிகள் நவ்சேரா பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அகதிகளுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வந்ததால், அதனைப் பெற மக்கள் கூட்டமாக நின்றிருந்தனர். அப்போது, முகாமின் நிர்வாகத் துறை கட்டடத்துக்கு முன்பு காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர் என்று முகாமின் பொறுப்பாளர் நூர் அக்பர் தெரிவித்தார்.
குண்டு வெடிப்பில் பலத்த காயமடைந்தவர்கள், உயர் சிகிச்சைக்காக பெஷாவர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சுமார் 35 கிலோ மதிப்புள்ள வெடிப்பொருள்கள் இந்த குண்டு வெடிப்பில் பயன்படுத்தியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானில், வரும் மே மாதம் 11-ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலை சீர்குலைக்கும் நோக்குடன் பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நிகழ்த்தியிருக்காலம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

8 கோல்களைத் தடுத்த கோல்கீப்பர்: 24 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த துருக்கிக்கு அதிர்ச்சியளித்த ஆஸ்திரேலியா!

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாக!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


