சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் கிளர்ச்சியாளர்கள் வியாழக்கிழமை ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஆயுதக் கிடங்கிலும் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த குண்டுவெடிப்பில் 40 பேர் உயிரிழந்தனர். 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று பிரட்டனைச் சேர்ந்த சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மத்திய சிரியாவின் நகரமான ஹாம்ஸ் நகரில் உள்ள ஆயுதக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறின. இதில் ஆயுதக் கிடங்கின் கட்டடம் தரைமட்டமானது.
ஆயுதக் கிடங்கின் அருகில் இருந்த பல வீடுகள் இடிந்தன. இன்னும் பல வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. சுவர்களில் பெரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் அதிபர் பஷார் ஆஸாத் ஆதரவாளர்கள்தான் அதிகளவில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

கோவையில் வானவில் சுயமரியாதை பேரணி!

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் முத்துப் பந்தல் விழா!

அமெரிக்க அரசு தடை விதித்த ஆந்த்ரோபிக் ஏஐ மாடல்கள்! ஏன்? எதற்காக? என்ன ஆபத்து?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


