கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

கோவையில் வானவில் சுயமரியாதை பேரணி!

கோவையில் மூன்றாம் பாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் பங்கேற்ற வானவில் சுயமரியாதை பேரணி குறித்து...

News image

கோவையில் நடைபெற்ற வானவில் சுயமரியாதை பேரணி - படம்: தினமணி

Updated On :15 ஜூன் 2026, 3:40 pm IST

கோவையில் நடைபெற்ற வானவில் சுயமரியாதை பேரணியில் மூன்றாம் பாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கோவையில் ஏழாவது வானவில் சுயமரியாதை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் நடைபெற்ற இந்தப் பேரணியில் மூன்றாம் பாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்து, தங்களுக்கு பிடித்த வண்ண உடைகளை அணிந்து, அவர்களுக்கு பிடித்தார்போல அலங்கரித்துக் கொண்டனர்.

இந்தப் பேரணியில் "என் வாழ்க்கை என் உடல் என் காதல், என் உடலை வன்புணர்வு செய்தாலும் உண்டாகும் வலி ஒன்றுதான், உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியும் வண்ண பலூன்களை கையில் ஏந்தியும், வானவில் நிறத்தில் நீளமான துணியை ஏந்திய படியும் பேரணி மேற்கொண்டனர்.

ரேஸ் கோர்ஸில் வழக்கமாக இந்தப் பேரணி நடைபெறும் என்றும் ஆனால், அங்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். திருநர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும், தங்களுக்கு என சொந்த வீடுகளை அரசாங்கம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பேரணியில் பங்கேற்றவர்கள் கூறினர்.

திருநர் மக்களுக்கு மட்டும் திருமண செய்துகொள்வதற்கு உரிமை கிடைத்துள்ளதாகவும், அந்த உரிமை தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றனர்.

மேலும், பெற்றோர்கள் எங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அரசாங்கம் தங்களை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்கள்போல பார்க்கிறது. ஆனால், அவ்வாறு இல்லை நாங்களும் அதிகமாக இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் பேரணியை மேற்கொள்வதாகத் தெரிவித்தனர்.

Summary

Hundreds of people, including transgender individuals and members of the LGBTQ+ community, participated in the 'Vanavil' (Rainbow) Self-Respect Rally held in Coimbatore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.