சிரியாவில் புதன்கிழமை ரசாயன வெடிகுண்டுகளை வீசி 1300 பேரை ராணுவம் கொன்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாதுக்கு எதிராக 2011-ம் ஆண்டு முதல் போராட்டம் தொடர்ந்து வருகிறது. மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ள அரசுக்கு எதிரான புரட்சியாளர்களும், ஆசாதுக்கு ஆதரவான ராணுவத்தினரும் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி மோதி வருவதால் இதுவரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் ஆவர்.
தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் ராணுவத்தினர் ரசாயன வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் புதன்கிழமை 1300 பேரை கொன்றுவிட்டதாக எதிர்க்கட்சியான சிரிய தேசிய கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.
இது மிகப்பெரிய படுகொலை என்றும் இது தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று சிரியாவில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ள பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.
இருப்பினும், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மனித உரிமைகள் அமைப்பு உறுதி செய்யவில்லை.
டமாஸ்கஸின் புறநகர் பகுதியான கோவ்டாவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ராணுவத்திடம் இருந்து புரட்சிப் படையினர் கைப்பற்றியுள்ள அப்பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வந்தனர். நச்சுவாயு கலந்த ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனை சுவாசித்த பலர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. எனினும், தாக்குதலுக்கு ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை சிரியா அரசுத் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் தரப்பில் வெளியிடப்பட்ட விடியோ அசல்தானா என்பதும் உறுதி செய்யப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ம.பி. ரயிலில் தீ விபத்து என வதந்தி! தண்டவாளத்தில் குதித்த 4 பேர் ரயில் மோதி பலி!

சென்னை குடிநீா் ஏரிகளில் 52 % நீா் இருப்பு
துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் இருவா் கைது! தில்லு தாஜ்புரியா கும்பலைச் சோ்ந்தவா்கள்!
தில்லியில் பைக் டாக்ஸி ஓட்டுநரைத் தாக்கிய நபா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



