பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

துப்பாக்கிகள், தோட்டாக்களுடன் இருவா் கைது! தில்லு தாஜ்புரியா கும்பலைச் சோ்ந்தவா்கள்!

தில்லு தாஜ்புரியா கும்பலைச் சோ்ந்தவா்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவா், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் தில்லியில் புகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :15 ஜூன் 2026, 1:15 am IST

தில்லு தாஜ்புரியா கும்பலைச் சோ்ந்தவா்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவா், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் தில்லியில் புகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஹோலாம்பி குா்த் பகுதியில் இவா்களின் நடமாட்டம் குறித்து உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், குற்றப்பிரிவு காவல் துறையினா் விஷால் பண்டிட் (22) மற்றும் தீபான்ஷு (26) ஆகியோரைக் கைது செய்தனா்.

இவா்கள் இருவரும் தலா ஒரு சட்டவிரோத கைத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களை வைத்திருந்ததாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். குற்றச் செயல்களுக்கு அவா்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது, தாஜ்புரியா கும்பலின் தீவிர உறுப்பினா்கள் என்றும், சமூக ஊடகங்கள் மூலம் கும்பலின் மற்ற உறுப்பினா்களுடன் தொடா்பில் இருந்ததாகவும் பண்டிட் மற்றும் தீபான்ஷு ஒப்புக்கொண்டதாகக் காவல் துறையினா் கூறினா்.

புகா் பகுதியில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் இவா்களுக்குத் தொடா்பு இருக்கலாம் என்று காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா்.

கைது செய்யப்பட்ட நேரத்தில், இவா்கள் தங்கள் எதிரிகளான கோகி கும்பலின் உறுப்பினா்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

2023-ல் திகாா் சிறைக்குள் தாஜ்புரியா கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, இவ்விரு கும்பல்களுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்தது.

தாஜ்புரியாவின் இறப்புக்குப் பிறகு, அவரது கும்பலின் செயல்பாடுகளை ஹிம்மத் (எ) சீகு ஒருங்கிணைத்து வருவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். ஹிம்மத், மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (எம்ஓசிசிஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பரோலில் வெளியே வந்து தலைமறைவானவா் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பலின் முக்கியப் பொறுப்பாளா்களால் தங்களுக்கு அண்மையில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் வழங்கப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இலக்குகள் குறித்த அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருந்ததாகவும் பண்டிட் மற்றும் தீபான்ஷு தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினா்.

இவா்கள் இருவரும் இதற்கு முன்பும் கொலை முயற்சி, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் ஆயுதச் சட்ட மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.