சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பாகிஸ்தானில் குண்டு வெடித்து 9 ராணுவ வீரர்கள் சாவு

பாகிஸ்தானில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

Updated On :1 செப்டம்பர் 2013, 7:35 pm

பாகிஸ்தானில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியான வஜிரிஸ்தானில் உள்ள தாடாகேலில் இருந்து மிராம்ஷா நோக்கி ராணுவ வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தன. போயா என்ற இடத்தில் அவை சென்றபோது அங்கு சாலையோரம் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 9 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, இந்த குண்டு வெடிப்பில் 3 வீரர்கள் இறந்ததாக ராணுவச் செய்திக்குறிப்பு தெரிவித்தது.

இப்பகுதியில் ராணுவ வாகனங்கள் பத்திரமாகச் செல்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், நாள்தோறும் மாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக, ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.