சீனாவில் ஞாயிற்றுக்கிழமை நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.8 பேர் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர்.
தென்மேற்கு சீனாவில் உள்ள யுனன் மாகாணம் ஹுஜிங் நகரத்தில் டியான் டாங் எரிபொருள் நிறுவனத்திற்கு சொந்தமான பைலாங்ஷான் நிலக்கரி சுரங்கம் உள்ளது.
இங்கு ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென வாயு குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். சுரங்கத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று சுரங்க நுழைவு வாயிலில் சிக்கிய 3 பேரை மீட்டனர். மீட்பு படையினர் வாயு வெளியேறுவதை கட்டுப்படுத்தி சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

8 கோல்களைத் தடுத்த கோல்கீப்பர்: 24 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த துருக்கிக்கு அதிர்ச்சியளித்த ஆஸ்திரேலியா!

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாக!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


