வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஐ.நா. கூட்டத்தை புறக்கணிக்க ஷேக் ஹசீனா முடிவு

நியூயார்க்கில் இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ள 68ஆவது ஐ.நா. சபைக் கூட்டத்தை புறக்கணிக்க வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா முடிவு செய்துள்ளார்.

News image
Updated On :12 செப்டம்பர் 2013, 12:27 am IST

நியூயார்க்கில் இம்மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ள 68ஆவது ஐ.நா. சபைக் கூட்டத்தை புறக்கணிக்க வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா முடிவு செய்துள்ளார்.

வங்கதேசத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் நெருக்கடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யத் தவறியமை உள்ளிட்ட காரணங்களால் ஷேக் ஹசீனா இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஆளும் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, தேர்தல் காரணமாக வங்க தேசத்தில் நிலவி வரும் அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாகவும், நாடாளுமன்றக் கூட்டம் தொடங்க இருப்பதாலும் ஹசீனா ஐ.நா. சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யாத காரணத்தாலேயே ஹசீனா, ஐ.நா. சபை கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவை எடுத்ததாக வங்கதேச வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

68-வது ஐ.நா. சபை கூட்டத்திற்கு ஹசீனா சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ""வங்கதேசப் பிரதமர் ஹசீனா, எதிர்க்கட்சித் தலைவர் கலீதா ஜியா இருவரும் அரசியல் நெருக்கடியைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

நோபல் பரிசு வென்ற முகமது யூனஸிடம் வங்கதேச அரசு கடுமையாக நடந்து கொண்டது, அந்நாட்டு அரசின் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமெரிக்க அரசு, வங்கதேச அரசு மீது அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக ஹசீனா செப்டம்பர் 23ஆம் தேதி நியூயார்க் சென்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்தித்துப் பேச முடிவு செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.