ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

மெக்சிகோவில் நிலச்சரிவு: 3 குழந்தைகள் உள்பட 8 பேர் சாவு

மெக்சிகோவில் நிலச்சரிவு ஏற்பட்டதில் மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

Updated On :11 செப்டம்பர் 2013, 6:56 pm

மெக்சிகோவில் நிலச்சரிவு ஏற்பட்டதில் மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோவின் கிழக்கு மெக்சிகன் மாகாணத்தில் மன்ஜானாடிட்லா நகரில் திங்கள்கிழமை அதிகாலை இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பிரதேசமான இப்பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு வீடுகளை மண் மூடியது. அந்த வீடுகளில் வசித்த 3 குழந்தைகள் உள்பட 8 பேர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தகவலறிந்து அரசு அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மழை தொடர்வதால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. வெள்ளத்தில் சிக்கிய ஒரு சிறுவனும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.