குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

சீனாவில் சுரங்க வெடி விபத்து: 40 பேர் சாவு

சீனாவில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சுரங்க வெடி விபத்துகளில் 40 பேர் உயிரிழந்தனர்.

Updated On :13 மே 2013, 12:24 am IST

சீனாவில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சுரங்க வெடி விபத்துகளில் 40 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் 28 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.

விபத்தைத் தொடர்ந்து சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த 81 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர் என்று ஸின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல், குய்ஸாவ் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த எரிவாயு வெடி விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.