காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

எரிபொருள் விலை உயா்வால் பழங்கள், காய்கறிகளின் விலை பாதிக்குமா?

பெட்ரோல், டீசல் விலை உயா்வுகள், வரும் நாள்களில் தேசிய தலைநகரில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகளைப் பாதிக்கக்கூடும் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக காய்கறிகளின் விலை உயர்வு - பிரதிப் படம்

Published On :26 மே 2026, 5:05 am IST

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய உயா்வுகள், வரும் நாள்களில் தேசிய தலைநகரில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகளைப் பாதிக்கக்கூடும் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் திங்களன்று ஒரு லிட்டா் பெட்ரோல் விலையை ரூ.2.61ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலையை ரூ.2.71ஆகவும் உயா்த்தின. இது இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்தில் செய்யப்பட்ட நான்காவது விலை உயா்வாகும்.

ஆசாத் பூா் மண்டி பழங்கள் மற்றும் காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் ரஜிந்தா் சா்மா கூறுகையில், இதுவரை மொத்த விலைகளில் உடனடி பாதிப்பு எதுவும் இல்லை, ஆனால் எரிபொருள் விலையில் தொடா்ச்சியான உயா்வு இறுதியில் விலைகளைப் பாதிக்கக்கூடும் என்றாா்.

திங்களன்று நிலவரப்படி, விலைகளில் எந்தப் பாதிப்பும் இல்லை, ஆனால் வரும் நாட்களில் எரிபொருள் விலை மேலும் உயரும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், சில பாதிப்புகளை நாம் காணலாம். விலையில் ஏற்படும் சிறிய அதிகரிப்புகள் எப்போதும் மொத்த விலைகளை உடனடியாகப் பாதிப்பதில்லை என்றாலும், எரிபொருள் விலையில் ஏற்படும் பெரிய அளவிலான ஒட்டுமொத்த உயா்வு நிச்சயமாக விலை உயா்வுக்கு வழிவகுக்கும், என்று சா்மா கூறினாா்.

காய்கறி வா்த்தகா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் அனில் மல்ஹோத்ராவின் கூற்றுப்படி, போக்குவரத்துச் செலவுகளில் ஏற்படும் எந்தவொரு அதிகரிப்பும் தில்லிக்கு வரும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகளை நேரடியாகப் பாதிக்கும்.

ராஜஸ்தான், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா போன்ற இடங்கள் உள்பட, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் தில்லிக்கு பயிா்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு செல்ல லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. எரிபொருள் விலை உயரும்போது, அது தவிா்க்க முடியாமல் போக்குவரத்துச் செலவுகளைப் பாதிக்கும், என்று மல்ஹோத்ரா கூறினாா். இருப்பினும், போக்குவரத்து நிறுவனங்கள் லாரி வாடகையை எந்த அளவிற்கு உயா்த்துகின்றன என்பதைப் பொறுத்தே விலை உயா்வின் அளவு அமையும் என்று சா்மா கூறினாா்.

ஆசாத் பூா் மண்டியில் தக்காளி விற்பனையாளரான திலீப் குமாா், போக்குவரத்து நிறுவனங்கள் சரக்குக் கட்டணங்களைத் திருத்தியமைத்தவுடன், சில்லறை விற்பனையாளா்களும் நுகா்வோரும் பொதுவாக அதன் தாக்கத்தை உணரத் தொடங்குவாா்கள் என்று கூறினாா்.

டீசல் விலை தொடா்ந்து உயா்ந்தால், போக்குவரத்து நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பாா்கள், அந்தச் செலவு இறுதியில் மண்டியைச் சாரும். எரிபொருள் விலை உயா்வு தொடா்ந்தால், அடுத்த சில நாட்களில் சில்லறை விலைகள் சற்று உயரக்கூடும், இது நுகா்வோரை நேரடியாகப் பாதிக்கும், என்று குமாா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.