கராச்சி: பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இயங்கி வந்த மருத்துவமனை ஒன்றில் இன்று காலை அதிபயங்கர குண்டு வெடித்ததில், 25 பேர் பலியாகினர்.
முன்னதாக, பயங்கரவாத ஆதிக்கம் மிகுந்த பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேஷன் தலைவர் பிலால் அன்வர் காசி மர்ம நபர்களால் சுடப்பட்டார்.
அவரை சக வழக்குரைஞர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு ஏராளமான வழக்குரைஞர்கள் திரண்டிருந்த போது, மருத்துவமனைக்குள் பயங்கர சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 25 பேர் பலியாகினர். 35 பேர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்கு துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால் குவெட்ட நகரில் பதற்றம் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

