/

இலங்கை அதிபருடன் சுஷ்மா சந்திப்பு: தேசிய, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சு

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இன்று அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறீசேனாவை நேரில் சந்தித்துப் பேசினார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2016, 9:05 am

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இன்று அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறீசேனாவை நேரில் சந்தித்துப் பேசினார்.

இலங்கை அதிபருடனான சந்திப்பு மிகச் சிறப்பாக அமைந்ததாக இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே. சின்ஹா கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு, பல நூற்றாண்டு காலமாக நீடிக்கும் நாகரீகமான நட்புறவை அதிபர் சிறீசேனா நினைவு கூர்ந்தார் என்றும் சின்ஹா கூறினார்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பில், இரு நாட்டு தலைவர்களும், இந்தியா - இலங்கை இடையே செயல்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும், நேற்று நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டம் குறித்தும் கலந்தாலோசனை செய்தனர்.

இந்தியாவால், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் திருப்தியளிப்பதாக அந்நாட்டு அதிபர் பாராட்டியதோடு, அதற்காக தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.