துருக்கி ஆட்சியை கைப்பற்ற நடந்த முயற்சி முறியடிப்பு: அந்நாட்டு அதிபர் அறிவிப்பு

துருக்கியில் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் எரடோகன் அறிவித்துள்ளார்.
துருக்கி ஆட்சியை கைப்பற்ற நடந்த முயற்சி முறியடிப்பு: அந்நாட்டு அதிபர் அறிவிப்பு
Updated on
1 min read

அங்காரா: துருக்கியில் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் எரடோகன் அறிவித்துள்ளார்.

மேலும், துருக்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தவர்கள் அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியதிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

துருக்கி ஆட்சியை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பான அசம்பாவிதங்களில் 161 பேர் பலியாகினர்.

இந்த நிலையில், அங்காராவில் உள்ள சாணக்யா மாளிகையில் இருந்து பேசிய அந்நாட்டு பிரதமர் பினாலி யில்டிரிம், துருக்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற சிலர் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது.

ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற ராணுவ தலைமை தளபதி ஹூலுசி அகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் 161 பர் பலியாகினர். 1,440 பேர் காயமடைந்தனர்.

துருக்கியின் இறையாண்மையை காக்கும் வகையில் நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com