முனிச்: ஜெர்மனியின் முனிச் நகரில், துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 9 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவனும் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இது குறித்து ஜெர்மன் நாட்டு காவல்துறை கூறுவதாவது, அதிக மக்கள் நடமாட்டம் மிகுந்த முனிச் மாலுக்குள் துப்பாக்கியோடு நுழைந்த ஜெர்மனி-இரானியனான இளைஞன் ஒருவன், பொது மக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான்.
இதில், 9 பேர் பலியாகினர். இறுதியாக அந்த இளைஞன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான் என்று தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் கடந்த ஒரு வாரத்தில் நடக்கும் 3வது அசம்பாவிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவன் இரட்டைக் குடியுரிமை பெற்றவன் என்பதும், இதுவரை அவன் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

