பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் இல்லை! இந்திய கம்யூ. லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

தன்னுடைய சொந்த தாத்தாவையே மணந்த பெண்: அமெரிக்காவில் ஒரு அபூர்வ ராகம்!

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய சொந்த தாத்தாவையே, யாரென்று தெரியாமல்  திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :3 அக்டோபர் 2016, 4:15 pm IST

வாஷிங்க்டன்: அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய சொந்த தாத்தாவையே, யாரென்று தெரியாமல்  திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுபற்றி அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'ப்ளோரிடா சன் போஸ்ட்'  பத்திரிகையில் வெளியாகியிருக்கும் செய்தி விபரம் வருமாறு:

அமெரிக்காவை ப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த முதியவர்(68) ஒருவருக்கு சமீபத்தில் லாட்டரியில் பல லட்ச  ருபாய் பரிசு விழுந்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து விவகாரத்தாகியுள்ள அவர் மீண்டும் ஒரு திருமணம் செய்வது என்று முடிவெடுத்து அதற்கென உள்ள நிறுவனம் ஒன்றை அணுகியிருக்கிறார். அவர்கள் காண்பித்த புகைப்படங்களில் 24 வயது பெண் ஒருத்தியின் புகைப்பபடம் பிடித்திருக்கவே அவளை உணவகம் ஒன்றில் சந்தித்திருக்கிறார். பார்த்த உடனேயே பிடித்துவிட்டதால் இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்.

அதன் பிறகு ஒரு நாள் வீட்டில் ஓய்வாக இருக்கும் போது  கணவனின் ஒரு புகைப்பட ஆல்பம் ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அவருடைய முதல் மனைவி மற்றும் அவர்களது குழந்தைகள் புகைப்படங்களை பார்த்தவருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் அவருடைய முதல் மனைவியின் குழந்தைகளில் ஒருவர்தான் அவளது அப்பா. இதனால் அந்த இளம்பெண் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்.

இது பற்றி தனது கணவனிடம் தெரிவித்த பொழுது, அவரது முதல் மனைவிக்கும் அவருக்கும் சண்டைவந்து  அவர் திடீரென்று குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்  என்றும், அவளைக் கண்டுப்பிடிக்க   தான் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததையும் தெரிவித்தார். பின்னர் சில வருடங்களுக்கு பிறகு தான் செய்த இரண்டாவது திருமணமும் தோல்வியில்முடிந்தது என்றும், அந்த திருமணம் மூலம் தனக்கு குழந்தைள் பிறந்தன என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.அதன் பின்னர் 2005-ஆம் ஆண்டு லாட்டரியில் ஜாக்பாட் வென்ற  உடனேதான், மீண்டும் மூன்றாவது முறை திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தாகவும் அவர் விளக்கினார்.

அதற்கு பிறகு சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண் கூறும்பொழுது, 'எங்களது பந்தம் மிகவும் உறுதியானது என்று கருதுகிறேன். இதுபோன்ற எந்த விஷயத்தாலும் எங்களை பிரிக்க முடியாது' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.