எகிப்தில் ராணுவம் குண்டு வீச்சு: பயங்கரவாதிகள் 100 பேர் பலி!
எகிப்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்மீது ராணுவம் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் பலியாகினர்.


கெய்ரோ: எகிப்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்மீது ராணுவம் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் பலியாகினர்.
எகிப்தில் சினாய் தீபகற்ப பகுதி ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக உள்ளது. எனவே, அவர்களை ஒழிக்க ராணுவம் தீவிர தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இந்த நிலையில் நேற்று வடக்கு சினாஸ் தீபகற்ப பகுதியில் ரபா, ஷேக் ஷூவையத் மற்றும் அல்-அரீஷ் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ராணுவ போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. அதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியாகினர். 40 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் அங்குள்ள துறைமுகம் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அங்கிருந்த பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து குடோன்களும் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த தகவலை எகிப்து ராணுவம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சினாய் பகுதியில் உள்ள சோதனைச்சாவடி ஒன்றில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதில் 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கவே இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்ட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...