பாரீஸுக்கு தென் கிழக்கே உள்ள நோட்ரே தாம் இடத்தில் கேஸ் சிலிண்டர்கள் நிரப்பப்பட்ட கார் ஓன்று அனாதையாக நிற்பதாக வந்த தகவலை அடுத்து விரைந்து சென்ற போலீசார் காரை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பதிவு எண் எதுவும் இல்லாத அந்த காரில் இருந்து, ஏழு சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டன.மூன்று கேன்களில் டீசலும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டது. அரபி மொழியில் எழுதப்பட்ட சில ஆவணங்களும் அந்த காரிலிருந்து கைப்பற்றப்பட்டதாக காவல் துறை தெரிவிக்கிறது. விசாரணைக்கு பிறகு இந்த சம்பவம் தொடர்பாக மூன்று இளம் பெண்களை கைது செய்யப்பட்டனர்.