மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எப்போதும் போர் ஆயத்த நிலையில் ராணுவம் இருக்க வேண்டும்: சீன அதிபர் பேச்சு

சீன ராணுவம் எப்போதும் போர் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என்று அதிபர் ஜீ ஜின்பிங் கூறியுள்ளார்.

News image
Updated On :23 ஏப்ரல் 2017, 7:25 pm

DIN

சீன ராணுவம் எப்போதும் போர் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என்று அதிபர் ஜீ ஜின்பிங் கூறியுள்ளார்.
அந்நாட்டின் ராணுவத் தலைமையகத்தைப் பார்வையிட்ட பின்னர் வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்று, அவர் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது: சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நாட்டுக்கும் 2017-ஆம் ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கம்யூனிஸ சித்தாந்தம் என்னும் கோட்டையை நீங்கள் மேலும் வலுப்படுத்த வேண்டும். பாதுகாப்புப் படைகளின் சீரமைப்பு, மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். எப்போதும் போர் ஆயத்தத்துடன் இருக்க வேண்டும்.
எந்தச் சூழலிலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு மற்றும் மத்திய ராணுவ ஆணையம் இடக்கூடிய எந்த உத்தரவையும் உறுதியுடன் நிறைவேற்ற எப்போதும் ஆயத்த நிலையில் நமது படைகள் இருக்க வேண்டும்.
நாட்டின் அனைத்துத் துறைகளிலும் காணப்படும் ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறும்போது, பாதுகாப்புத் துறையில் நிலவும் ஊழல் முறைகேடுகளையும் குறிப்பிட்டாக வேண்டும். ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் முழு விசுவாசத்தைப் பெறும் வகையில் இத்துறையில் நிலவும் அரசியல் ரீதியான ஊழல் ஒழிக்கப்படும் என்றார் அவர்.
உலகின் மிகப் பெரிய பாதுகாப்புப் படையான சீன ராணுவத்தில் 23 லட்சம் வீரர்கள் உள்ளனர். தெற்கு சீன கடல், கொரிய தீபகற்பம் ஆகிய பகுதிகளில் பதற்ற நிலை நிலவி வருகிறது. வட கொரிய விவகாரத்தையடுத்து, அமெரிக்க கடற்படையின் மிகப் பெரிய போர்க்கப்பலான கார்ல் வின்ஸன் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிக்காக கொரிய தீபகற்பப் பகுதிக்கு விரைத்துள்ளது. 
இந்த நிலையில், சீன ராணுவம் எப்போதும் போர் ஆயத்தத்துடன் இருக்க வேண்டும் அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கின் பேச்சு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிபர் ஜீ ஜின்பிங் அந்நாட்டின் சர்வ அதிகாரத்தையும் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமாவார். மேலும் சீன பாதுகாப்புப் படைகளின் தலைமைக் கட்டுப்பாட்டு அமைப்பான மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் அவர் பொறுப்பு வகிக்கிறார். 
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த நாட்டின் அனைத்து முக்கியப் பதவிகளையும் ஒரே நபர் வகிக்கும் நிலை உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.