லண்டன்: தன்னை நாடு கடத்தக் கோரி இந்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கில், லண்டன் நீதிமன்றத்தில் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ஆஜர் ஆனார்.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தொழில் வளர்ச்சிக்கு என்று கூறி பல்வேறு இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9000 கோடி அளவுக்கு கடன் பெற்றார். ஆனால் வாங்கிய கடனைத் திருப்பியளிக்காத அவர், பண மோசடியில் ஈடுபட்டார். அது தொடர்பாக இங்கு அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று விட்டார்.
எனவே நீதிமன்ற வழக்குகளை சந்திக்க ஏதுவாக அவரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு இங்கிலாந்து அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி லண்டன் புறநகர் பகுதி ஒன்றில் சில மாதங்களுக்கு முன் அவரை ஸ்காட்லாந்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று துவங்கி வரும் 14–ந்தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்காக இந்திய விசாரணை ஆணைய அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையா இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கின் தீர்ப்பு 2018 - ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தினப்பலன்கள் - மிதுனம்

தினப்பலன்கள் - ரிஷபம்

எந்த கட்சி அதிகாரத்தை வேண்டாம் என்று சொல்லும்? கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்

தங்கம் பவுனுக்கு ரூ.320 உயா்வு!
வீடியோக்கள்

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...
#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |
தினமணி வீடியோ செய்தி...

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK
தினமணி வீடியோ செய்தி...

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
தினமணி வீடியோ செய்தி...

