பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து மீது டிரக் மோதி பயங்கர விபத்து: 22 பேர் உடல் கருகி பலி

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தும் - டிரக்கும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 22 பேர் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :5 ஜூன் 2017, 5:14 am

DIN

லக்னௌ: உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தும் - டிரக்கும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 22 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று அதிகாலை 2.30 மணிக்கு பரேலி தேசிய நெடுஞ்சாலையில் இன்வர்ட்டர் பல்கலைக்கழகம் அருகே பேருந்து திரும்பும் போது எதிரே வந்த டிரக் மோதி விபத்து ஏற்பட்டதில் பேருந்து முழுவதும் மளமளவெனத் தீ பிடித்து எரிந்தது.

இந்தப் பயங்கர விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிந்தனர். பலர் காயம் அடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பேருந்து மீது வேகமாக வந்து மோதிய டிரக் ஓட்டுநர் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேருந்து முமுவதும் தீ பற்றி எரிந்ததால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.