வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தென்மேற்கு துருக்கியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.1 புள்ளிகளாக பதிவு

துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 12:49 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
Updated On :25 நவம்பர் 2017, 3:03 am

DIN

அங்காரா: துருக்கி நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 12:49 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 புள்ளிகளாக பதிவானது. 

முகலா மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 6.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கந்திலி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இரவு நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் ஒன்று திரண்டனர். அருகில் உள்ள நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலநடுக்கத்தில் சோதங்கள் அல்லது உயிர்சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த புதன்கிழமை முகலா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் ரிக்டரில் 5 புள்ளிகளாக பதிவாக நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011-ஆம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.