டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

2017-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிப்பு!

ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பினை உறுதி செய்தமைக்காக 2017-ஆம் ஆண்டு  இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :3 அக்டோபர் 2017, 10:17 am

DIN

ஸ்டாக்ஹோம்: ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பினை உறுதி செய்தமைக்காக 2017-ஆம் ஆண்டு  இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுகள் சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளன.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், நோபல் பரிசுக் குழுத் தலைவர் தாமஸ் பெர்ல்மன் அதனை அறிவித்தார்.

இந்த ஆண்டுக்கான இயற்பியல் துறை நோபல் பரிசினை ரெய்னர் வைஸ், பெரி பேரிஸ்  மற்றும் தோர்ன் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் பெற உள்ளனர். விருதுத் தொகையான ரூ.7 கோடி இவர்கள் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது

சரியாக 100 ஆண்டுகளுக்கு உலகப்புகழ் பெற்ற இயற்பியலாளரான ஐன்ஸ்டீன்  ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பு பற்றிய தனது கருத்தாக்கத்தினை முன்வைத்தார். அப்பொழுது அது பற்றிய ஆய்வு, நிரூபணங்கள் எதுவும் இல்லை. ஆனால் தற்பொழுது மேலே கூறிய மூன்று விஞ்ஞானிகளும் இது பற்றிய ஆய்வுகளை செய்து ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பை உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.