இந்தியா, சீனா, பிரேசில், ரஷியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் 9-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு சீனாவின் சியாமென் நகரில் 4, 5-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
இதில் இந்திய செய்தி நிறுவனத்துக்கு சீன பத்திரிகையாளர் டாங் யுங்காய் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:
நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். இந்திய மக்கள் அனைவரும் சிறந்தவர்கள், உண்மையானவர்கள். அதனாலேயே எனக்கு இந்தியர்களை மிகவும் பிடிக்கும். இந்தியர்கள் நேர்மையில் சிறந்தவர்கள். நான் இந்தியாவில் உள்ள ஒரு பிரபல பல்கலையில் ஹிந்தி பயின்றுள்ளேன்.
என்னால் ஹிந்தி மொழியில் எழுதி, படித்து, பேசத் தெரியும். அங்கு பயின்ற போது பல இந்தியர்களுடன் நட்பு பாராட்டும் வாய்ப்பு கிடைத்தது. அதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை மிகவும் மதிக்கிறேன்.
இரு நாடுகளிடையே நல்லுறவு வேண்டும். அது எதிர்காலத்தை சிறப்பானதாக்கும். இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் இணைந்து இரு நாடுகளிடையிலான பிரச்னைகளை பேசித் தீர்க்க வேண்டும். அதுவே எனது விருப்பம்.
சீனர்களில் பெரும்பாலானோர் இந்திய திரைப்படத்தின் ரசிகர்கள். தற்போது கூட நான் தங்கல் படம் பார்தேன். அமீர்கான் சிறப்பாக நடித்துள்ளார். இந்திய இசையும் மிகவும் பிடிக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


