ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

ஆப்கன்: 100க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகளை பிணைக்கைதிகளாக சிறைபிடித்த தலிபான்கள்

வடக்கு ஆப்கானிஸ்தானில் பேருந்தில் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோரை தலிபான்கள் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்ற சம்பவத்தை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2018, 3:12 pm IST


காபூல்: வடக்கு ஆப்கானிஸ்தானில் பேருந்தில் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோரை தலிபான்கள் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்ற சம்பவத்தை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.

பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தலிபான்களின் பிடியில் பிணைக் கைதிகளாக சிக்கியிருப்பது அந்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்ட குந்தூஷ் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி தலிபான்களிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

சமீபத்தில் ஆப்கனில் தலிபான்களின் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களில் பயங்கர வெடிகுண்டுகளை வெடித்து பலர் உயிரிழக்கக் காரணமாக இருந்த தலிபான்கள் தற்போது பிணைக் கைதிகளாக நூற்றுக்கணக்கானோரை பிடித்துச் சென்றிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிணைக் கைதிகளை மீட்கும் பணியில் மதத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.