ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

ஆப்கன் அரசு வளாகத் தாக்குதல்: பலி 43

ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகங்களை குறிவைத்து திங்கள்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

Updated On :26 டிசம்பர் 2018, 12:46 am IST


ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகங்களை குறிவைத்து திங்கள்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காபூலில் அரசுத் துறை அலுவலகங்கள் நிறைந்த பகுதிக்கு திங்கள்கிழமை காரை ஓட்டி வந்த பயங்கரவாதி அதனை வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நடத்தினார்.
அதையடுத்து, மேலும் சில பயங்கரவாதிகள் துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில், காவல் துறை அதிகாரி ஒருவர் பலியானதாக முதலில் தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று, அவர்களிடம் சிக்கியிருந்த 350-க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.