ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலகங்களை குறிவைத்து திங்கள்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காபூலில் அரசுத் துறை அலுவலகங்கள் நிறைந்த பகுதிக்கு திங்கள்கிழமை காரை ஓட்டி வந்த பயங்கரவாதி அதனை வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நடத்தினார்.
அதையடுத்து, மேலும் சில பயங்கரவாதிகள் துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில், காவல் துறை அதிகாரி ஒருவர் பலியானதாக முதலில் தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று, அவர்களிடம் சிக்கியிருந்த 350-க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

டெஸ்ட் போட்டிக்கு மத்தியில் மாதவிடாய்..! மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா!

சம்பவக்காரி! கட்டா குஸ்தி - 2 படத்தின் பாடல் வெளியீடு!

பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking


