

ஓமனில் இரு நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தலைநகர் மஸ்கட்டில் உள்ள 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலுக்கு திங்கள்கிழமை சென்று வழிபட்டார்.
குஜராத்தைச் சேர்ந்த வர்த்தகர்களால் கட்டப்பட்ட அந்த கோயிலில் ஸ்ரீஆதி மோதீஸ்வர் மகாதேவ், ஸ்ரீமோதீஸ்வர் மகாதேவ், ஸ்ரீஹனுமான் ஆகிய தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. கடந்த 1999-ஆம் ஆண்டில் அந்த கோயில் புனரமைக்கப்பட்டது.
அக்கோயிலில் வழிபாடு நடத்தியதன் மூலம் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாக சுட்டுரையில் மோடி தெரிவித்துள்ளார். இதேபோல, மஸ்கட்டில் உள்ள புகழ்பெற்ற பெரிய மசூதிக்கும் அவர் சென்றார். கடந்த 2001-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த மசூதிக்கு, இந்தியாவில் கலை நுணுக்கத்துடன் செதுக்கப்பட்ட 3 லட்சம் டன் எடையுள்ள பளிங்கு கற்கள் கொண்டு செல்லப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.